27 ஜனவரி, 2011

தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு, தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைவு

உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து தமிழ்த் தேசிய விடுதலை கூட்டமைப்பு போட்டியிடவுள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என். ஸ்ரீகாந்தாவை தலைவராகவும் முன்னாள்

எம்.பி. எம்.கே. சிவாஜிலிங்கத்தை செயலாளராகவும் கொண்டு தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு இயங்கிவருகின்றது. உள்ளூராட்சித் தேர்தலில் வல்வெட்டித்துறை நகரசபை தலைமைவேட்பாளராக எம்.கே. சிவாஜிலிங்கம் போட்டியிடவுள்ளார். ஏனைய சபைகளிலும் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் சார்பில் வேட்பாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களுக்கும் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு வடக்கு கிழக்கில் நவசமாஜயக்கட்சியுடன் இணைந்து மேசை சின்னத்தில் போட்டியிட முடிவு செய்திருந்தது. இந்த நிலையிலேயே கூட்டமைப்பின் தலைவரகளுடன் பேச்சவார்த்தை இடம்பெற்றது.

உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளும் இணைந்து போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக