27 ஜனவரி, 2011

மார்ச் 17இல் உள்ளூராட்சி சபைத்தேர்தல்




உள்ளூராட்சி சபைத்தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 17ஆம் திகதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக தெரிவித்துள்ளார்.

வேட்புமனுத்தாக்கல் இன்று நண்பகல் 12மணியுடன் முடிவடைந்த பின்னேரே அவர் இதனைத் தெரிவித்தார்.

அதேநேரம் நாட்டின் பிரதான கட்சிகளான ஆளும் ஐக்கிய மக்கள் முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் என்பன தமது வேட்புமனுக்களை மாவட்ட காரியாலயங்களில் இன்று தாக்கல் செய்தன.

நாடுமுழுவதும் உள்ள 301 பிரதேச சபைகள் அனைத்துக்கும் ஓரே நாளில் தேர்தல் இடம் பெறவிருக்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக