1 அக்டோபர், 2010

இத்தாலி வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களை நாட்டிற்கு எடுத்து வர நடவடிக்கை

இத்தாலி மோதனா நகரில் கடந்த 25ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். புத்தளம் மாவட்டதைச் சேர்ந்த உயிரிழந்த இலங்கையர்கள் இருவரின் சடலங்களை நாட்டிற்கு எடுத்துவருவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இத்தாலியின் மோதனா நகரிலிருந்து காரில் சென்று கொண்டுருந்த வேளை, தண்ணீர் பௌசர் ஒன்றுடன் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரியவிக்கப்படுகின்றது. இதில் வென்னப்புவ கிரிமெட்டியான பிரதேசத்தைச் சேர்ந்த திஸ்னா ஹெலன் சுஜீவனி எனும் 29 வயது யுவதியும், லுணுவில சிரிகம்பொல பிரதேசத்தைச் சேர்ந்த டப்ளிவ். அஜித் ரஞ்சன் சுரேஷ் பெர்ணான்டோ எனும் 34 வயது நபருமே உயிரிழந்தவர்களாவர். காரில் பயணித்த உயிரிழந்த திஸ்னா ஹெலன் சுஜீவனியின் கணவர் சுமித் எண்டன், அவர்களது மகன் சுபுன் தில்ஷான் ஆகியோருடன், காரினைச் செலுத்திச் சென்ற சாரதியான 36 வயது மில்ரோய் மற்றும் அவரது மனைவியான ஏண் கயான் திலங்கா (வயது 32) ஆகியோரும் காயமடைந்து மோதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது மோதனா நகர வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக