1 அக்டோபர், 2010

எரிக் சொல்ஹெய்ம் விரைவில் இலங்கை வருவார்

நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி தொடர்பான அமைச்சரும் முன்னாள் சமாதானத் தூதருமான எரிக் சொல்ஹெய்ம் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் மற்றும் நலன்புரி நிலைய மக்கள் தொடர்பில் நோர்வே அமைச்சர் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டுள்ள புலி உறுப்பினர்கள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன், எரிக் சொல்ஹெய்ம் நியூயோர்க்கில் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரு தரப்பு உறவுகள் மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகள் குறித்தும் இலங்கைச் சந்திப்பின் போது எரிக் சொல்ஹெய்ம் கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக வடக்கு புனர்வாழ்வு மையங்களில் மக்கள் எதிர்நோக்கி வரும் நிலைமைகள் குறித்து இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்படவுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான சமாதான ஏற்பாட்டாளராக எரிக் சொல்ஹெய்ம் கடந்த காலங்களில் கடமையாற்றியமையும், இவரது பணி தொடர்பில் தற்போதைய அரசாங்கம் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டிருந்தமையும் கவனிக்கத்தக்கவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக