11 செப்டம்பர், 2010

வட., கிழ. அபிவிருத்திக்கு மூன்றாண்டுத் திட்டம் : கெஹெலிய

வடக்கின் வசந்தம், கிழக்கின் எழுச்சி போன்ற திட்டங்களுக்கு மேலதிகமாக மூன்றாண்டு அபிவிருத்தித் திட்டமொன்று விரைவில் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளரும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கெஹெலிய றம்புக்வெல தெரிவித்தார்.

இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தற்போது யுத்தம் முடிவுற்றதையடுத்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைத் துரிதமாக அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

வடக்கின் வசந்தம், கிழக்கின் எழுச்சி போன்ற திட்டங்களுக்கு மேலதிகமாக செயற்படுத்தப்படவுள்ள இம்மூன்றாண்டு திட்டம், வடக்கு, கிழக்கு மாகாணங்களை அபிவிருத்தி செய்வதற்காகக் கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக