23 டிசம்பர், 2010

ஐ. நா. நிபுணர் குழு வந்தால் சாட்சியங்களை பதிவு செய்ய தயார் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழு இலங்கைக்கு வர அரசாங்கம் தீர்மானித்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாயின் சாதாரண நடைமுறைக்கமைய ஐ.நா. நிபுணர்கள் குழுவின் வாக்கு மூலங்களைப் பதிவு செய்துகொள்வதற்குத் தயாரென கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஐ.நா. நிபுணர்கள் குழுவின் இலங்கை விஜயம் தொடர்பாக நல்லிணக்க ஆணைக்குழு வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப் பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான்கீ மூனால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு அரசாங்கம் அனுமதித்து அதற்கான வசதிகளைச் செய்துகொடுக் குமாயின் அக்குழுவின் வாக்குமூலங்களை நமது சாதாரண நடைமுறைக்கமைய பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. நிபுணர்கள் குழு இலங்கைக்கு விஜயம் செய்து கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் ஆஜராகத் தயார் என்று கூறியிருந்தது. உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் பட்சத்தில் அதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்துகொடுக்கத் தயார் என்று இலங்கை வெளிவிவகார அமைச்சும் அறிவித்திருந்தது.

அதேநேரம், ஐ.நா. நிபுணர்கள் குழு இலங்கை வருவது பற்றியோ அல்லது நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பது பற்றியோ நிச்சயமாகக் கூற முடியாதென ஐ.நா. பேச்சாளரே கூறியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக