23 டிசம்பர், 2010

இந்தியாவில் இருந்து தேங்காய்:பாகிஸ்தானில் இருந்து வெங்காயம் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த அத். பொருட்கள் இறக்குமதி

அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றுக்கு ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாட்டை அப்பொருட்களை இறக்குமதி செய்வதன் மூலம் நிவர்த்தி செய்யவிருப்பதாக கூட்டுறவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

திறந்த சந்தையில் சில பொருட்களின் விலைகள் அதிகரித்தி ருப்பதால் அப்பொருட்களுக்கு ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாட்டால் நுகர்வோர் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்கான சகல நடவடிக்கைக ளையும் அரசாங்கம் முன்னெடுத் துள்ளது.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் மோச மான காலநிலை போன்ற காரணங் களால் பெரிய வெங்காயத்திற்குத் தட்டுப் பாடு ஏற்பட்டுள்ளது. இதனைத் தீர்க்கும் வகையில் பாகிஸ்தானி லிருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்படவுள்ளது.

இந்தியாவிலிருந்து பெரிய வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுவதை அந்நாடு தடை செய்திருப்பதால், பாகிஸ்தானிலிருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்யத் தீர்மானித்திருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

தேங்காய்களுக்கு ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய அடுத்த வாரம் இந்தியாவிலிருந்து தேங்காய்களை இறக்குமதி செய்யவுள்ளோம். இதனமூலம் உள்ளகச் சந்தையில் தேங்காயொன்றின் விலையை 30 ரூபாவாகக் குறைக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

அத்தியாவசியப் பொருட்கள் நாட்டுக்கு இறக்குமதி செய்வதற்கு எதிராக எதிர்க் கட்சி பாரிய ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறது. அப்பாவி நுகர்வோரைப் பாதிப்படையச் செய்து அதன் மூலம் அரசியல் இலாபம் தேடிக்கொள்வதற்கு எதிர்க்கட்சி முயற்சிக்கிறது.

கோழி இறைச்சிகளை நாட்டுக்கு இறக்குமதி செய்வதென அரசாங்கம் தீர்மானித்தபோதும் இவ்வாறான போராட்டங்களையே எதிர்க்கட்சி முன்னெடுத்தது. ஆனால் அது தோல்வியிலேயே முடிவடைந்தது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக