22 நவம்பர், 2010

தற்போதைய காலநிலை டிசம்பர் வரை தொடரும் பலத்த காற்று; இடி, மின்னல் எச்சரிக்கை






தற்போதைய இடைப்பருவப் பெயர்ச்சி மழை வீழ்ச்சி டிசம்பர் மாதத்தின் முதல் வாரம் வரையும் நீடிக்க முடியுமென வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் சமிந்திர டி சில்வா நேற்றுத் தெரிவித்தார்.

இடைப்பருவ பெயர்ச்சி மழை வீழ்ச்சி காலநிலையில் பெரும்பாலும் பிற்பகலில் இடி, மின்னலுடன் தான் மழை பெய்யும். அதனால், இடி, மின்னல் பாதிப்புக்களிலிருந்து தவிர்ந்து கொள்ளுவதில் ஒவ்வொருவரும் கூடிய கவனம் செலுத்துவது அவசியம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இடி, மின்னலுடன் மழை பெய்யும் போது சிலவேளைகளில் கடும் காற்றும் வீச முடியும் என்றும் அவர் கூறினார்.

தற்போதைய மழைக்காலநிலை அடுத்துவரும் சில தினங்களுக்கு நீடிக்கும் எனக் குறிப்பிட்ட அவர், நேற்றுக் காலை 8.30 மணிக்கு முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சிப் பதிவுப்படி ஆகக் கூடிய மழை வீழ்ச்சி 90.8 மி.மீட்டர்களாகப் பதிவாகியுள்ளது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக