22 நவம்பர், 2010

மத்திய மாகாண சபை ஒதுக்கீடு: யாழ். மிருசுவில் ரயில் நிலையம் ரூ. 20 மில்லியனில் புனரமைப்பு






யாழ்ப்பாணம், மிருசுவில் ரயில் நிலையம் 20 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

மத்திய மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டில் இந்த புகையிரத நிலையம் நிர்மாணிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தலைமையிலான குழுவினர் எதிர்வரும் 27ம் திகதி சனிக்கிழமை மிருசுவில் பிரதேசத்திற்கு நேரில் விஜயம் செய்து நிலைமைகளை பார்வையிடவுள்ளனர்.

ரயில் நிலையத்தை புதிதாக நிர்மாணிப்பதற்கென 20 மில்லியன் ரூபாவுக்கான காசோலையை அன்றைய தினம் மத்திய மாகாண முதலமைச்சர் டிக்கிரி கொப்பேகடுவ தன்னிடம் கையளிக்கவுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

ரயில் நிலைய நிர்மாணப் பணிக்கான கேள்விப்பத்திரம் வடமாகாண சபையினால் வெகுவிரைவில் கோரப் படவுள்ளதாகத் தெரிவித்த ஆளுநர், மூன்று மாத காலத்திற்குள் நிர்மாணப்பணிகளை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக