22 நவம்பர், 2010

இலங்கை அகதிகள் நாடு திரும்புவதற்கு உதவும் வகையில் நடமாடும் சேவை 115 அகதி முகாம்களில் துணைத் தூதரகம் ஏற்பாடு






தமிழக அகதி முகாம்களில் தங்கியிருக்கும் இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கு ஏதுவான ஆவணங்களை வழங்கும் நோக்கில் சென்னையிலுள்ள இலங்கைத் துணைத் தூதுவர் வீ. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடமாடும் சேவையொன்று நடத்தப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக மதுரையில் அப்பகுதி மாவட்ட ஆட்சியர் ஊடாக இம்மாதம் 20ஆம் 21ஆம் திகதிகளில் இந்நடமாடும் சேவை நடைபெற்றதாகத் துணைத்தூதுவர் தினகரனுக்குத் தெரிவித்தார்.

இதேபோல் இலங்கைத் தமிழர்கள் தங்கியிருக்கும் 115 அகதி முகாம்களில் அந்தந்தப் பகுதி மாவட்ட ஆட்சியாளர்கள் ஊடாக நடமாடும் சேவை முன்னெடுக்கப் படும்.

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர்; ‘வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதை விட நாட்டுக்குத் திரும்ப வேண்டும்’ என்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ‘மஹிந்த சிந்தனை’க்கு அமைய 115 முகாம்களிலும் இந்த நடமாடும் சேவை நடத்தப்படவுள்ளது.

அகதி முகாம்களிலுள்ள இலங்கையர்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பிறப்புகள், திருமணங்கள் சட்ட ரீதியான பதிவுகள் இல்லாமல் உள்ளன. அகதிகளுக்கான சலுகைகளைப் பெறுவதாயினும், நாடு திரும்பி மீள்குடியேறுவதாயினும் ஆவணங்கள் அவசியம்.

இதற்காகவே, மதுரையில் நாம் நடமாடும் சேவையை ஆரம்பித்துள்ளோம். ஏனைய பகுதிகளிலும் இச்சேவை விஸ்தரிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக