2 அக்டோபர், 2010

வன்னியில் மாட்டெருவினுள் மறைத்து பாலை மரங்கள் கடத்தல்

முல்லைத்தீவு, வவுனியா உட்பட வன்னியில் அதிகளவு பாலை மரங்கள் காணப்படுவதால் அவற்றை வெட்டி லொறிகளில் யாழ்ப்பாணத்துக்கு கடத்தும் கும்பல் அதிகரித்துள்ளன.

வவுனியா இலவன் குளத்திலிருந்து கடந்த 22ஆம் திகதி திருட்டுத்தனமாக பாலை மரங்களை வெட்டி மரக் குற்றிகளை லொறிகளில் ஏற்றி மாட்டு எருவினால் மறைத்து கடத்தும் நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதேபோன்று கடந்த 29ஆம் திகதி முல்லைத்தீவு விசுவமடு பகுதியிலிருந்து எரு ஏற்றி வந்த லொறியொன்றை சோதனையிட்ட போதும் பாலை மரக்குற்றிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

லொறிச் சாரதிகள் கைது செய்யப் பட்டனர்.

சாவகச்சேரி பிரதான பொலிஸ் இன்ஸ்பெக்டர் சனத்குமார தலை மையில் பொலிஸ் உத்தியோகத்தர் களான அஜித், ருவான், திஸாநா யக்க ஆகியோர் இந்த சுற்றிவளை ப்பில் ஈடுபட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக