2 அக்டோபர், 2010

நாடு முழுவதும் ‘ஒரேநேரம்’ நியம நேரத்தை வர்த்தமானி மூலம் அறிவிக்க தீர்மானம்

நாடு முழுவதும் ஒரே நேரத்தை அமுல்படுத்தும் வகையில் நியம நேரத்தை உத்தியோபூர்வமாக வர்த்தமானி மூலம் அறிவிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி நாடு முழுவதற்குமான பொதுவான நேரம், டிசம்பர் 31ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்கு அறிவிக்கப்பட்டு 2011 முதல் அமுல் படுத்தப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வேறுபட்ட நேரங்கள் பயன்படுத்தப் படுவதால் அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளது.

சில ஊடக நிறுவனங்களும் வேறுபட்ட நேரங்களையே பயன்படுத்துவதாகத் தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக புதிய சரியான நேரத்தை அறிவிக்க அளவீட்டு மற்றும் தரச் சேவைத் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கிரீன்விச் நேரத்திற்கும் இலங்கை நேரத்திற்குமிடையே 5.30 மணி நேர வித் தியாசம் காணப்படுகிறது. இதனடிப் படையில் புதிய நேரம் கணிக்கப்பட உள்ள தாக தகவல் திணைக்களம் கூறியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக