6 அக்டோபர், 2010

இடைநிறுத்தப்பட்ட 'கல்ப் எயார்' விமான சேவை மீண்டும் ஆரம்பம்



பயங்கரவாத அச்சம் காரணமாக நீண்டநாள் இடைநிறுத்தப்பட்டிருந்த 'கல்ப் எயார்' விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நீண்டநாள் இடைநிறுத்தப்பட்டிருந்த 'கல்ப் எயார்' விமான சேவையின் அ320 விமானம், 150 பயணிகளுடன் நேற்றிரவு 8.20 மணியளவில் பஹ்ரேனிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். .

இந்த விமான சேவை வாரத்தில் முன்று நாட்கள் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக