16 செப்டம்பர், 2010

இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சே அமெரிக்கா பயணம் ஐ.நா.சபை கூட்டத்தில் பங்கேற்பு





ஐ.நா. சபையில் உச்சி மாநாடு வருகிற 20-ந் தேதி தொடங்கி 22-ந் தேதி வரை நடக்கிது. உலக நாட்டு தலைவர்கள் இதில் பங்கேற்கின்றனர்.

இந்த கூட்டத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சேயும் பங்கேற்று பேச உள்ளார். இதற்காக ராஜபக்சே தலைமையிலான உயர் மட்டக்குழு அமெரிக்கா சென்றுள்ளது.

இலங்கையில் போர் காலத்தில் நடந்த மனித உரிமை மீறல் தொடர்பாக விசாரணை நடத்த ஐ.நா.சபை 3 பேர் குழுவை அமைத்தது. இதற்கு ராஜபக்சே கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனால் ஐ.நா.சபை ராஜபக்சே இடையே மோதல் போக்கு இருந்தது. இந்த நிலையில் ராஜபக்சே ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்க சென்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக