16 செப்டம்பர், 2010

தமிழ்நாட்டிலிருந்து தாய்நாடு திரும்பிய அகதிகள் கடற்படையினரால் மீட்பு

இந்தியாவுக்கு சென்ற இலங்கை அகதிகள் நாடு திரும்புகையில் மன்னார் பகுதியில் வைத்து 13 பேர் தங்களால் மீட்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. இதில் மூன்று சிறுவர்கள்,ஏழு ஆண்கள், மூன்று பெண்கள் அடங்குகின்றனர். ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வந்த இவர்கள் காப்பாற்றப்பட்டதாக படையினர் தெரிவிக்கின்றனர்.

இவர்கள் யுத்த காலத்தின் போது வவுனியா, யாழ்பாணம், மன்னார் பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் எனவும் அவர்கள் தமிழ் நாட்டிலுள்ள மண்டபம் முகாமிலிருந்து திரும்பியவர்கள் எனவும் விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது. இலங்கையைச் சேர்ந்த 73 ஆயிரம் அகதிகள் தென்னிந்தியாவில் உள்ள 112 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் 34 ஆயிரம் பேர் தமிழ் நாட்டுக்கு வெளியில் அமைந்துள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின் அறிக்கையின் படி இவ்வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் 852 பேர் தமிழ்நாட்டிலிருந்து தாயகம் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக