16 செப்டம்பர், 2010

பொலிஸ் - கொள்ளை கோஷ்டி மோதல் துப்பாக்கி பிரயோகத்தில் 7 வயது சிறுவன் பலி

கொள்ளைக் கோஷ்டியினருக்கும் பொலிஸாருக்குமிடையே இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 7 வயது பாடசாலை மாணவன் ஒருவன் மரணமானதுடன் சிறுவனது தந்தை காயங்களுடன் நாகொடை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் நேற்று (15) பிற்பகல் 12.30 மணியளவில் பேருவளை காலி வீதி நகர சபைக்கருகே இடம்பெற்றுள்ளது.

அளுத்கம மொரகல்ல பகுதியைச் சேர்ந்த எஸ். சுதில் நில்புல் த சில்வா என்ற சிறுவனே இவ்வாறு மரணமானவராவார்.

இவர் தனது தந்தையுடன் பேருவளை நகருக்கு வந்த சமயம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அளுத்கமை பகுதியிலிருந்து கார் ஒன்றில் தப்பிச் சென்றுள்ள கொள்ளையர்களை பொலிஸார் பின் தொடர்ந்து வந்துள்ளனர். இதன் போதே துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது.

கொள்ளையர்கள் அதே வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக