16 செப்டம்பர், 2010

போதைவஸ்து குற்றவாளிகளுக்கு புனர்வாழ்வளிக்க தனியான சிறை

போதைப்பொருள் குற்றச்செயலுடன் சம்பந்தப்பட்ட சிறைக் கைதிகளுக்குத் தனியான சிறைச்சாலையொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக புனர்வாழ்வு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்தார்.

சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவிக்கும் கைதிகளில் 40 வீதமானோர் போதைப் பொருள் பாவனையுடன் சம்பந்தப்பட்டவர்களாவர். அவர்களைத் தனியாகப் பிரித்து அவர்களுக்குப் புனர்வாழ்வளிப்பதே அரசாங்கத்தின் நோக்கமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன் சிறைச்சாலைகளின் குறைபாடுகளை நிவர்த்திக்கும் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக வெலிக்கடை சிறைச்சாலையில் 50 மலசலகூடங்களை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் குழந்தைகளுடன் உள்ள பெண் சிறைக்கைதிகளுக்காக சகல வசதிகளையும் கொண்ட சிறைச்சாலை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் வேலைத் திட்டங்கள் தொடர்பாக மேலும் தெரிவித்த அமைச்சர்,

சிறைச்சாலைகள் கடந்த காலங்களில் வேறு ஒரு அமைச்சின் கீழ் இணைக் கப்பட்டு சிறியதாய் கண்ணோட்டத்திலேயே அவை பார்க்கப்பட்டன.

இதனைக் கருத்திற்கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிறைச்சாலைகள் மறுசீரமைப்புக்கென தனியான அமைச்சொன்றை உருவாக்கி அதனை என்னிடம் கையளித்துள்ளார்.

அதற்கிணங்க சிறைச்சாலைகளை புனரமைக்கும் செயற்திட்டங்கள் பல தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் சிறைக்கூடங்களுக்குள் இடம்பெறும் குற்றச்செயல்கள், தொலைபேசி பாவனைகள் பணப் புழக்கங்களைக் கட்டுப்படுத் துவதற்கான காத்திரமான வேலைத் திட்டங்களும் நதீமுறைப்படு த்தப்பட்டுள்ளன.

சிறைச்சாலைகளில் இட நெருக்கடியே தற்போது பெரும் பிரச்சினையா கியுள்ளது.

11,000 பேரை வைக்கக்கூடிய இடத்தில் 23,000 பேரை அடைத்து வைக்கும் நிலை உள்ளது.

இந்த இடநெருக்கடி பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக