1 செப்டம்பர், 2010

சீன உயர்மட்டக்குழு இலங்கை வருகை

சீனாவின் 200 பேர் அடங்கிய உயர்மட்டக் குழுவொன்று நேற்று இலங்கை வந்துள்ளது.

நேற்று முற்பகல் 11.30 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த சீனக்குழுவினரை, மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா தலைமையிலான குழுவினர் வரவேற்றனர் என எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

சீன யுவான் மாகாணத்தின் ஆளுநர் கிவின் குவான் ரொன்னும் இந்த குழுவில் இடம்பிடித்துள்ளார்.

சீனாவுக்குக் கடந்த மாதம் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த பிரதமர் டி.எம்.ஜயரத்னவின் அழைப்பின் பேரிலேயே இவர்கள் இலங்கை வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சீன உயர்மட்டக் குழுவினர் பிரதமர் டி.எம்.ஜயரத்னவை இன்று மாலை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பின் போது 4 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக