1 செப்டம்பர், 2010

அரசியலமைப்பு மாற்றம் தொடர்பான இறுதித் தீர்மானம் சபாநாயக்கருக்கு அறிவிக்கப்படும்

உயர் நீதிமன்றம் அரசியலமைப்பு மாற்றம் தொடர்பான ஆவணத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. 5 பேர் கொண்ட நீதிபதகளின் தலைவரான ஷிராணி பண்டாரநாயக்க இறுதித் தீர்மானம் சபாநாயக்கருக்கு அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

அரசியிலமைப்பு திருத்தத்தில் ஜனாதிபதி பதவி ஏற்றகும் முறைகள் எல்லைகளற்றதாய் மாற்றப்படும் சரத்தானது, ஜனாதிபதியானவர் பாராளுமன்றத்தில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்பதையும் உள்ளடக்கியுள்ளதாக தலைமைச் சட்ட அதிகாரி மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணி, மாற்றுக் கொள்கைகள் அமைப்பு மற்றும் டொக்டர்.ரொகான் எதிரிசிங்க ஆகியோரின் அரசியலமைப்பிற்கு எதிரான வழக்கு பதிவினை கருத்திற் கொண்டு சபாநாயகருக்கு இறுதித் தீர்மானம் அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக