26 செப்டம்பர், 2010

விடுதலை புலிகளின் சர்வதேச வலையமைப்பு தலைவர்களை ஒப்படைக்குமாறு நோர்வேயிடம் கோரிக்கை


விடுதலை புலிகளின் சர்வதேச வலையமைப்பு தலைவர்களை ஒப்படைக்குமாறு நோர்வேயிடம் கோரிக்கை விடுத்துள்ளார் இலங்கை ஜனாதிபதி! இது தொடர்பில் சிங்கள செய்தி தாள் ஒன்று விடுத்துள்ள செய்தியில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வி.புலிகளின் சர்வதேச வலையமைப்பை இல்லாதொழிப்பதற்கு நோர்வே அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கும் என ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஐ.நாவின் 65 வது மாநாட்டில் கலந்து கொண்ட போது நோர்வே பிரதமரை சந்தித்து இது தொடர்பான கோரிக்கையை விடுத்தார்.

அதற்கு பதில் அளித்த நோர்வே அதிபர் ஜேன்ஸ் டொலன் பெர்க் நோர்வேயில் இயங்கி வரும் வி.புலிகள் உறுப்பினர்கள் தொடர்பான தகவல்களை தமக்கு வழங்குமாறு மஹிந்தவிடம் கோரியுள்ளார்.

இது போன்று சர்வதேச பயங்கரவாத்தை இல்லாதொழிப்பதற்கு உலக தலைவர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார் என அச்செய்தி தெரிவிக்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக