26 செப்டம்பர், 2010

இந்தியா வழங்கும் 6000 வீடுகளைக் கொண்டு இவ்வருட இறுதிக்குள் ஆரம்பம்


மலையகப் பெருந்தோட்டங்களில் உள்ள தொழிலாளர்களின் ‘லயன்’ வரிசைக் குடியிருப்புகளை இடித் தழித்துவிட்டுத் தனித் தனி வீடுகளைக் கொண்ட கிராமங்களை அமைப் பதற்கு விரைவில் அடித்தளமிடப் படவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் வாரமஞ்சரிக்குத் தெரி வித்தார்.

இந்தியா வழங்கும் ஆறாயிரம் வீடுகளைக் கொண்டு, ‘லயன்’ குடியிருப்புகளைத் தரைமட்ட மாக்கிவிட்டுத் தனித் தனி வீடுகளைக் கொண்ட கிராமம் உருவாக்கப்படு மென்று பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.

இவ்வருட இறுதிக்குள் இதற்கான அத்திவாரம் இடப்படுமென்றும் மூன்றாண்டுகளுக்குள் ஆறாயிரம் வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டு விடுமென்றும் பிரதியமைச்சர் கூறினார். தோட்டங்களில் கிரா மங்களை அமைப்பதற்காகத் தொழி லாளர்களின் ‘லயன்’ வரிசை குடி யிருப்புகள் தொடர்பான மதிப் பீடொன்றை மேற்கொள்வதாகத் தெரிவித்த பிரதியமைச்சர், முதற் கட்டமாக எந்தத் தோட்டத்தில் எத்தனை வீடுகள் அமைக்கப்படும் என்பதைப் பற்றிப் பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.

‘தேயிலைத் தோட்டத் தொழிற் துறை படிப்படியாக நலிவடைந்து வருகிறது. இலங்கையிலும் இதே நிலைதான்.

இன்னும் பதினைந்து ஆண்டு களில் தோட்டத் தொழில் அருகி விடக்கூடும். அதற்கு முகங் கொடுக் கும் வகையில் தொழிலாளர்களின் வாழ்க்கை முறை, வாழ்வாதாரம் என்பவற்றில் மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக