26 செப்டம்பர், 2010

பெண் மீது பாலியல் பலாத்காரம் புரிய முயன்ற கான்ஸ்டபில் கைது

கண்டி மாவடத்;திலுள்ள தவுலகலை பொலிஸ் நிலைய கான்ஸ்டபில் ஒருவர் இன்று காலை தனிமையில் வீட்டிலிருந்த பெண் ஒருவர் மீது பாலியல் பலாத்காரம் புரிய முட்பட்டார் என்ற குற்றச் சாட்டில் கைது செய்யப் பட்டுள்ளார்.

விசாரணை ஒன்றிற்காக வீடொன்றிற்குச் சென்ற சமயம் தனிமையில் இருந்த அப் பெண்மீது மேற்படி கான்ஸ்டபில் தவறாக நடக்க முற்பட்டதாக அப் பெண் செய்த முறைப்பாட்டை அடுத்தே பொலிஸ் குறித்த கான்ஸ்டபிளை கைது செய்துள்ளதோடு மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக