26 செப்டம்பர், 2010

இந்திய இலங்கை கடற்படைகளின் அதிகாரிகள் 29 ஆம் திகதி சந்திப்பு

இந்தியக் கடற்படை மற்றும் கடலோரக் காவல்படையுடனான சந்திப்பு எதிர்வரும் 29ஆம் திகதி நடைபெறும் என்று இலங்கைக் கடற்படைப் பேச்சாளர் கப்டன் அதுல சேனரத் தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பு, இந்திய இலங்கைக் கடல் எல்லையில் இந்தியக் கடற்படைக் கப்பல் ஒன்றில் இடம்பெறவுள்ளது. இலங்கைக் கடற்படையின் உயர்மட்டத் தளபதிகள் பலர் இந்திய கடற்படைத் தளபதிகளுடன் இதன்போது பேச்சு நடத்தவுள்ளனர்.

தமிழ்நாடு மீனவர்கள் தாக்கப்பட்டது தொடர்பான விடயங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளது. இது வருடத்தில் இரண்டு முறை நடைபெறுகின்ற வழக்கமானதொரு சந்திப்புத்தான் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

அதுவேளை முன்னதாக இலங்கைக் கடற்படையை அவசர சந்திப்புக்கு அழைத்திருப்பதாகவும், இதன்போது தமிழ்நாடு மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்பாக பேசப்படவுள்ளதாகவும் மண்டபத்திலுள்ள இந்தியக் கடலோரக் காவல்படை கட்டளை அதிகாரி சைனி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக