27 செப்டம்பர், 2010

மலேசிய பிரதமருடன் ஜனாதிபதி சந்தித்துப் பேச்சு முதலீட்டு ஊக்குவிப்பு தொடர்பாக ஆராய்வு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மலேசிய பிரதமர் அப்துல் ரஸாக்கை நியூயோர்க்கில் சந்தித்து பேசினார். மூன்று தசாப்த காலம் இடம்பெற்ற பயங்கரவாதத்தை முறியடிக்க படையினருக் கான யுத்தப் பயிற்சி மற்றும் புலனாய்வுத் துறையில் மலேசியா இலங்கைக்கு வழங்கிய உதவிகளுக்கு ஜனாதிபதி அச்சமயம் மலேசிய பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.

இலங்கையின் பாதுகாப்பு படையினரை மேலும் பலப்படுத்தும் நோக்கில் பிராந்தியத்தில் உயர்மட்ட படையினர் பயிற்சி பாடசாலையான ஸ்கயிட் படை யினர் பயிற்சி பாடசாலையில் பயிற்சியளிக்க தொடர்ந்து வாய்ப்பளிப்பதற்கு மலேசிய அரசாங்கம் இணங்குவதாக இந்த சந்திப்பின் போது மலேசிய பிரதமர் குறிப்பிட்டார்.

தற்போது இலங்கையில் முதலீடு செய்துள்ள மலேசியர்கள் பெரும்பாலும் தொலைத் தொடர்புத் துறையிலேயே முதலீடு செய்துள்ளனர். இதனை மலேசிய பிரதமரின் அவதானத்துக்கு உட்படுத்திய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏனைய துறைகளிலும் மலேசிய வர்த்தகர்களை முதலீடு செய்ய ஊக்குவிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி மலேசிய பிரதமரைக் கேட்டுக் கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக