21 ஆகஸ்ட், 2010

தப்பிச் செல்ல முயன்ற கைதி சுடப்பட்டு மரணம்: போகம்பறையில் சம்பவம்


கண்டி போகம்பறை சிறைச்சாலையில் இன்று காலை கைதிகள் சிலர் தப்பிச் செல்ல முயற்சித்தபோது, சிறைக்காவலர்களால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் மரணமடைந்துள்ளார்.

இத்தகவலை சிறைச்சாலை ஆணையாளர் மேஜர் ஜெனரல் வி.ஆர். டி சில்வா தெரிவித்துள்ளார்.

கைதிகள் சிறைச்சாலையின் இரண்டாவது மாடியின் கூரை மீதேறி தப்பிச் செல்ல முயன்றதாகவும், சிறைக்காவலர்கள் எச்சரித்தும் அவர்கள் அதனை அலட்சியப்படுத்தியதால் அவர்களை நோக்கிச் சுட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர் என சிறைச்சாலை ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக