21 ஆகஸ்ட், 2010

இலங்கையில் மேலும் இரு இந்திய துணைத் தூதரகம்



இலங்கையில் மேலும் இரு இந்திய துணைத் தூதரகம் அமையவுள்ளது. இந்த தூதரகங்கள் யாழ்ப்பாணம், அம்பனத்தோட்டம் ஆகிய நகரங்களில் அமையவுள்ளன.

இதற்கான ஒப்பந்தத்தை இரு நாடுகளும் கொழும்பில் வெள்ளிக்கிழமை பரிமாறிக்கொண்டன. அதிபர் மகிந்த ராஜபட்ச கடந்த ஜூன் மாதம் இந்தியா வந்த போது அந்நாட்டில் மேலும் இரு துணைத் துதரகத்தை அமைப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டது. இதற்கு செயல்வடிவம் கொடுக்கும் விதத்தில் இப்போது ஒப்பந்தம் வடிவமைக்கப்பட்டு இரு நாடுகளும் பரிமாறிக் கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தை கொழும்பில் இலங்கை வெளியுறவுச் செயலர் ஜெயசிங்கேயும், இந்திய தூதரக அதிகாரி அசோக் கே.கந்தாவும் பரிமாறிக் கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக