19 ஆகஸ்ட், 2010

தமிழ்த் தலைமைகளுடனான ஒப்பந்தங்களை எதிர்த்ததாலேயே தீர்வு சாத்தியமாகாமல் போனது

நல்லிணக்க ஆணைக்குழுவில் முன்னாள் எம்.பி. மங்கள முனசிங்கதமிழ்த் தலைமைகள் அரசாங்கங்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களை அமுல்படுத்துவதை எதிர்க்கட்சிகள் தீவிரமாக எதிர்த்ததாலேயே தீர்வு எதுவும் சாத்தியமாகாமல் போனதென்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இந்தியாவுக் கான முன்னாள் உயர்ஸ்தானிகருமான மங்கள முனசிங்க தெரிவித்தார்.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையொன்றுக்கு ஆளுங்கட்சி தீர்வொன்றை காண முற்பட்டால், அதனை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்ற அரசியல் போக்கின் காரண மாகவே நாட்டின் இனப்பிரச்சி னைக்குத் தீர்வொன்று எட்ட முடியாத நிலை ஏற்பட்டதாகவும் மங்கள முனசிங்க குறிப்பிட்டார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக் குழு முன்னிலையில் சாட்சியமளித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.

சுதந்திரத்திற்குப் பின்னர் தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியாக இழைக்கப்பட்ட அநீதிகள் யாவை என்று சுட்டிக்காட்டிய முனசிங்க, 1956 ஆம் ஆண்டின் சிங்களம் மட்டும் என்ற ஒரு சட்டத்தின் காரணமாகத் தமிழ் மக்களின் எதிர்காலம், பொருளா தாரம், கலாசாரம் உள்ளிட்ட அனைத்தும் சிதைவடைந்ததாகவும் குறிப்பிட் டார்.

ஆணைக் குழுவின் விசாரணை அதன் தலைவர் முன்னாள் சட்டமா அதிபர் சித்திராஞ்சன் டி சில்வா தலைமையில் கொழும்பு 7, ஹோட்டன் பிளேசிலுள்ள லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் நேற்று முன்தினம் (17) இடம்பெற்றபோது சாட்சியமளித்தார் மங்கள முனசிங்க. “தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அநீதிக்கு எதிராக அவர்கள் அஹிம்சை வழியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியபோது, சில சிங்கள பெளத்த செயற்பாட்டாளர்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்.

சிங்களம் மட்டும் சட்டம் அமுலுக்கு வந்ததன் பின்னர், அப்போதையப் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க தந்தை எஸ். ஜே. வி. செல்வநாயகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி உடன்படிக்கையொன்றைச் செய்தார். ஆனால், அதனை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜே. ஆர். ஜயவர்தன கண்டிக்குப் பாத யாத்திரை சென்றார். பின்னர் டட்லி சேனநாயக்கா ஆட்சிக்கு வந்ததும் தந்தை செல்வநாயகத்துடன் உடன்படிக்கை செய்தார். அதனை நடைமுறைப்படுத்தவிடாமல் மற்றைய தரப்பினர் எதிர்த்தார்கள்.

இவ்வாறான எதிர்ப்பு அரசியல்தான் நாட்டின் பிரச்சினையைப் பூதாகரமாக்கியது. இதனால், சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க முன்வைத்த நல்ல தீர்வும் சாத்தியமாகவில்லை” என்று குறிப்பிட்ட அவர், 2002 இல் கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கை தோல்வியடை ந்தமை தொடர்பான தமது கருத்தையும் தெரிவித்தார்.

“ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெற்றும், அவற்றில் இணக்கம் காணப்பட்ட ஒரு சிறிய விடயம்கூட நடைமுறைப்படுத்தப்படவில்லை. புலிகளின் உளவுப் பிரிவினர் சகல இடங்களுக்கும் செல்ல முடிந்தது. அதனால் பின்னர் தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொள்ள முடிந்தது. போர் நிறுத்த உடன்படிக்கை மீறப்படுவதைத் தடுத்து நிறுத்த எந்த வழிவகையும் இருக்கவில்லை.

வெறுமனே மீறல் சம்பவங்களைக் கண்காணிக்க மாத்திரமே உடன்படிக்கையில் ஏற்பாடுகள் குறிக்கப்பட்டி ருந்தன. நோர்வே அனுசரணையாளர்களுக்கு தேசத்துக்கும் தேசத்துக்குமிடையிலான பிரச்சினையைத் தீர்த்து வைக்கவே முடியும். அவர்களுக்கு ஓர் இன முரண் பாட்டைத் தீர்க்கும் ஆழ்ந்த அறிவும் அநுபவமும் கிடையாது” என்றார்.

“ஆணைக்குழு முன் சாட்சியமளித்த சிலர், இது ஓர் இன முரண்பாடு அல்லவென்றும், பயங்கரவாதப் பிரச்சினையென்றும் கூறுகிறார்கள். நீங்கள் எவ்வாறு இனப்பிரச்சினை என்பீர்கள்?” என்று ஆணைக் குழுவின் தலைவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த முனசிங்க, “பயங்கரவாதம் ஏற்பட்டது பின்னர்தான். பயங்கரவாதத்தை நாங்கள்தான் (பெரும்பான்மையினர்) உருவாக்கினோம்.

அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது வன்முறையைப் பிரயோகித்தோம். 1983 ஆம் ஆண்டில் இடம்பெற்றது ஓர் இன வன்முறை அல்ல. அது ஓர் அரசியல் சார்ந்த வன்முறை. அதற்குப் பின்னர்தான் தமது பிரச்சினையைத் தீர்க்க வன்முறைதான் வழியென்று தமிழ் இளைஞர்கள் எண்ணினார்கள்” என்றதுடன், வடக்கில் தற்போது மேற்கொள்ளப்படும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை என்றார்.

“வடக்கில் தமிழர்களின் கடைகளை இராணுவத்தினர் நடத்துவதாகக் கூறுகிறார்கள். இதனை நிவர்த்திக்க வேண்டும். சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என நாட்டில் அனைவரும் சமாதானத்தையே விரும்புகின்றனர்.

அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாட் டுக்கு ஒத்துழைக்க புலம்பெயர் தமிழர்களும் ஆர்வமாக இருக்கிறார்கள். அவர்களையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக