19 ஆகஸ்ட், 2010

அரச அதிபர்கள், பிரதேச செயலர்களுக்கு யாழ்ப்பாணத்தில் இருநாள் மாநாடு


வடக்கில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் அரச நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர்களுக்கு விளக்கமளிக்கும் இரு நாள் மாநாடு யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் செப்டெம்பர் 6,7ம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

இம்மாநாட்டினை பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு ஏற்பாடு செய்துள்ளதுடன், நாடளாவிய சகல மாவட்டச் செயலாளர்களுக்கான மாநாடாக வும் யாழ். மாவட்ட பிரதேச செயலாளர்கள் கிராம சேவை அதிகாரிகளுக்கான மாநாடாகவும் இது ஒழுங்கு செய்யப்பட்டுள் ளதாக அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன, பிரதியமைச்சர் டிலான் பெரேரா மற்றும் அமைச்சின் செயலாளர், உயரதிகாரிகள் பலரும் இம்மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர். செப்டம்பர் 6ம் திகதி நாடளாவிய மாவட்டச் செயலாளர்களுக்கான மாநாடாக வும், மறுநாள் 7ம் திகதி பிரதேச செயலாளர் மற்றும் கிராம சேவகர்களுக்கான மாநாடாகவும் இதனை ஏற்பாடு செய்துள்ளதாக அவ்வதிகாரி தெரிவித்தார்.

இம்மாநாடு யாழ்ப்பாண மாவட்டச் செயலகக் கட்டடத்தில் இடம்பெறுவதுடன், யாழ். மாவட்டத்தில் அரசாங்கம் மேற்கொள்ளும் அபிவிருத்தித் திட்டங்கள் வடக்கின் அரச நிர்வாகக் குறைபாடுகள், மீள்குடியேற்றப் பிரதேசங்களின் குறைநிறைகள் தொடர்பிலும் இங்கு விரிவாக ஆராயப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக