19 ஆகஸ்ட், 2010

கனேடிய அரசின் சொற்பதங்கள் குறித்து தமிழர் பேரவை ஆழ்ந்த கரிசனை

எம்.வி.சன்சீ கப்பலில் வந்திறங்கியுள்ளவர்கள் தொடர்பான அவநம்பிக்கையான சொற்பதங்களை கனேடிய அரசாங்கம் அண்மைக்காலமாக வெளியிட்டு வருவது தொடர்பாக கனேடிய தமிழர் பேரவை ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து கனேடிய பேரவை தெரிவித்திருப்பதாவது :

"மிகவும் முக்கியத் தேவையாக உள்ள விசாரணைகள் முடிவடைய முன்னரே எம்வி சன்சீ கப்பலில் பயணித்தவர்கள் குற்றவாளிகள் என்றோ குற்றமற்றவர்கள் என்றோ அரசாங்கம் ஊகிப்பது பொருத்தமற்றது.

பணம் பெற்று ஆட்களைக் கப்பலில் அனுப்பி விடுபவர்கள் தொடர்பாகவும் கனடாவின் குடிவரவுக் கொள்கைகள் தொடர்பாகவும் உரையாடல்கள் நடத்தப்பட வேண்டியது அவசியம் என்பதை கனேடியத் தமிழர் பேரவை உணர்கிறது. இருப்பினும் தஇஙட மற்றும் கனேடிய பாதுகாப்பு புலனாய்வு சேவைகள் (இநஐந) வேறு தனிப்பட்ட, சுயமான விசாரணைகளை நடத்துவதைப் பாதிக்காத வகையில் இந்த உரையாடல்கள் நடத்தப்பட வேண்டும்.

கனேடிய எல்லைச் சேவைகள் முகவம், கனேடிய குடிவரவு மற்றும் அகதிகள் வாரியம் மற்றும் றோயல் கனேடிய காவல்துறையினர் ஆகிய அனைவருக்கும் வான்கூவர் தீவின் மேற்குக் கரையில் வந்திறங்கியுள்ள தமிழ் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோரின் தனிப்பட்ட அனுபவங்கள், மற்றும் அவர்கள் தொடர்பான உண்மை நிலைகளை அறிந்து கொள்வதில் முக்கிய பங்கு உள்ளது.

எம்விசன் சீ தொடர்பான விசாரணைகள் முழுமையாக தஇஙட மற்றும் இநஐந ஆகியோரின் வரையெல்லைக்குள் உட்பட்டதனால் அவை அரசியல் மயப்படுத்தப்படத் தேவையில்லை.

கனேடியர்களாக, எங்களின் சட்ட ஒழுங்கு முறைகளில் உள்ள தனிமனித சுதந்திரத்தில் நாங்கள் பெருமை கொள்கிறோம். அரச அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படும் எந்த ஒரு முதிர்ச்சியற்ற கருத்துக்களும் ஊகங்களும் கனடாவில் ஏற்கனவே உள்ள விசாரணை நடைமுறைகளை வலுவிழக்கச் செய்யும்.

எம்வி சன்சீ கப்பலில் கனேடிய சட்டங்களுக்கு எதிராகச் செயற்படும் நபர்கள் இருப்பின் சட்ட ஒழுங்கு அமுலாக்கலில் ஈடுபடுபவர்களுக்கு அதை விசாரணை செய்வதற்குரிய வலுவும் வழிமுறைகளும் உள்ளன.

இப்படியான விசாரணைகள் மூலமாக மட்டுமே, ஏற்கனவே பல இன்னல்களுக்கு உட்பட்டு வந்திருக்கும் இந்த அகதிகளுக்கு ஒரு நியாயமான சட்ட வழிமுறையை ஏற்படுத்துவதோடு அனைத்து கனேடியர்களின் நலனையும் கருத்தில் கொண்டு செயற்பட முடியும்.

கனேடியத் தமிழர்களே இந்தக் கப்பலில் வந்தவர்களின் பயணத்துக்கு நிதி உதவியை வழங்கியிருந்ததாக அமைச்சர் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.

முழுமையான விசாரணைகள் இன்றி ஊகங்களை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் கூறும் இத்தகைய கருத்துக்களினால் கனேடியர்கள் மத்தியில் அவநம்பிக்கையும் தேவையற்ற பதட்டமும் ஏற்படுகின்றன.

இத்தகைய கருத்துக்களினால் தங்களுடைய வாழ்வையும் உறவுகளையும் இங்கு கட்டியெழுப்பி வரும் கனேடியத் தமிழர்களுக்கு எதிராக உருவாக்கப்பட்டிருக்கின்ற காழ்ப்புணர்ச்சி, எமது கனேடிய தேசத்தின் பல்கலாசாரமும் அரவணைப்பும் நிறைந்த சமூகத்தின் தன்மையை எவ்வாறு பாதிக்கும் என்பதற்கு சான்றாக உள்ளது.

இத்தகைய பாதிப்புக்களை ஏற்படுத்தும் விடயங்களை அணுகும்போது அரசாங்கம் இன்னமும் மதிப்பீட்டுடன் நடந்து கொள்ள் வேண்டும்."

இவ்வாறு கனேடியத் தமிழர் பேரவை கோரிக்கை விடுக்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக