27 ஆகஸ்ட், 2010

கனடாவில் தாக்குதல் திட்டம் : 3 தீவிரவாதிகள் கைது

கனடாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டிய மூன்று தீவிரவாதிகளைப் பொலிசார் கைது செய்துள்ளனர்.

அவர்களில் மிஸ்பாகுதீன் அகமது (26) என்பவர் இந்தியாவை சேர்ந்தவர். மற்றொருவர் ஹைவா அலிஸாடேஹ்(30). இவர்கள் இருவரும் புதன்னன்று ஒட்டாவாவில் கைது செய்யப்பட்டனர். மூன்றாமவர் கனடாவைச் சேர்ந்த குரம் ஷெர்(28). இவர் ஒண்டாரியோவில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். மூவரும் அல் கொய்தா இயக்கத்துடன் தொடர்புடையவர்கள். அவர்கள் கனடாவில் உள்ள மின் நிலையங்களைத் தகர்க்கவே சதி திட்டம் தீட்டி இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

கனடா தான் அமெரிக்காவுக்கு அதிகளவு மின்சாரத்தை விநியோகம் செய்கிறது. நியூயோர்க் நகருக்குத் தேவையான ஒட்டு மொத்த மின்சாரமும் கனடாவில் உள்ள க்யூவெக் மின் நிலையத்தின் மூலமே கிடைக்கின்றது.

எனவேதான் மின் நிலையங்களையும் மின் பாதையையும் தகர்ப்பதற்குத் தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

கைதான மூவரும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் சென்று தீவிரவாத பயிற்சி பெற்று வந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மிஸ்பாருதீன் அகமது கனடா, ஒட்டாவா நகரிலுள்ள வைத்தியசாலையில் எக்ஸ்ரே ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

கனடாவில் 2006ஆம் ஆண்டு, இது போன்று தாக்குதல் சதி திட்டத்தில் ஈடுபட்டிருந்த 18 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக