27 ஆகஸ்ட், 2010

மனிதாபிமான பணிகளுக்கு மேலதிக நிதி தேவை : நீல் பூனே

மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க மேலதிகமாக நிதி தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக் கிளைப் பொறுப்பாளர் நீல் பூனே தெரிவித்துள்ளார்.

"மனிதாபிமான சேவைகளுக்காக 125 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்கொடையாக கிடைக்கப் பெற்றுள்ளன. எனினும் சேவைகளைத் தொடர்வதற்கு 165 மில்லியன் அமெரிக்க டொலர் இன்னும் தேவைப்படுகிறது.

இதனால் மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் சிக்கல் நிலைமை தோன்றியுள்ளது.

மனிதாபிமான உதவிகள் இன்னும் நிறைவடையவில்லை அவற்றைப் பாரியளவில் முன்னெடுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

சமாதானம் மற்றும் அபிவிருத்தியை ஏற்படுத்த வேண்டுமாயின் மீள் குடியேற்றப்பட்ட மக்களுக்கு தொடர்ச்சியாக நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும்.

இடம்பெயர் மக்களுக்குச் சுத்தமான குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

அதுமாத்திரமின்றி மீள் குடியேற்றப்பட்ட மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளும் வரையில் தொடர்ச்சியாக நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும்" என நீல் பூனே மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக