20 ஜூன், 2010

படைவீரர் நினைவுத்தூபி அருகில் அஞ்சலி நிகழ்வு ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் மலர் அஞ்சலி


தேசிய படைவீரர்கள் நினைவு தினம் நேற்று முன்தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலை மையில் பராளுமன்ற மைதானத் திலுள்ள நினைவுத் தூபிக்கருகில் நடைபெற்றது.

பிரதமர் டி.எம். ஜயரட்ன, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, அமைச்சர்கள், மாகாண ஆளுநர்கள், பாதுகாப்புச் செயலாளர், முப் படைத் தளபதிகள், வெளிநாட்டு ராஜதந்திரிகள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் நாடளாவிய ரீதியிலிருந்து யுத்தத்தின் போது உயிரிழந்த படைவீரர்களின் பெற் றோர் மற்றும் உறவினர்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத் தினர்.

பயங்கரவாதத்திலிருந்து நாடு மீட் கப்பட்ட முதலாவது வருடத்தை நினைவுகூரும் வகையில் நேற்று முன்தினம் காலை கொழும்பு காலி முகத்திடலில் தேசிய வெற்றி விழா கொண்டாட்டங்கள் மிகவும் பிர மாண்டமான வகையில் கொண்டா டப்பட்டன. இதனையடுத்து அன் றைய தினம் மாலை நாட்டை மீட் கும் நடவடிக்கையில் உயிர்நீத்த முப் படையினர் மற்றும் பொலி ஸாரையும் கெளரவிக்கும் வகையில் படைவீரர் அஞ்சலி நிகழ்வு பாராளு மன்ற வளாகத்தில் நடைபெற்றது.

ரணவிரு சேவை அதிகார சபை ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வு தேசிய கொடியேற்றப்பட்டு தேசிய கீதத்துடன் ஆரம்பமானது. சர்வமதத் தலைவர்களின் ஆசியுடன் முப்படை களினதும் அணிவகுப்புகள் இடம் பெற்றதையடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ படையினரின் நினைவுத் தூபிக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அதனையடுத்து பிரதமர் டி.எம். ஜயரட்ன, சபாநாயகர் சமல் ராஜ பக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் செய லாளர் கோதாபய ராஜபக்ஷ, ஜனா திபதியின் செயலாளர் லலித் வீர துங்க, முப்படைத் தளபதிகள் மற் றும் யுத்தத்தின் போது உயிர்நீத்த படைத்தளபதிகள், முப்படைகளிலும் உயர் பதவிகளை வகித்தவர்களின் குடும்பத்தினர் நினைவுத் தூபிக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அதனையடுத்து உயிர்நீத்த படை யினரின் பெற்றோர், உறவினர்கள் வெளிச்சக்கூடுகள், மலர் செண்டு களை வைத்து தமது அஞ்சலியைச் செலுத்தினர்.

உயிர்நீத்த படைவீரர்களின் நினை வாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு அருகில் அவர்களின் பெயர் கள் பொறிக்கப்பட்ட நினைவுப் படிகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உயர்நீத்த படையினரின் பெற்றோர் கள், பிள்ளைகள் மற்றும் உறவினர் கள் அதற்கு அருகில் சென்று மலர் களை வைத்து அஞ்சலி செலுத்தி கண்ணீர் மல்கும் காட்சிகள் மிக உருக்கமானதாக இருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக