15 ஜூன், 2010

ஆஸி. செல்ல முயன்ற அகதிகள் இந்தோனேஷியக் கடலில் மூழ்கி பலி




இந்தோனேஷியாவில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு மீன்பிடிப் படகில் செல்ல முயன்ற ஈழத் தமிழர்கள் இருவர் உட்பட 12 அகதிகள் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கடந்த வாரம் இடம்பெற்றுள்ளது.

திலீப்குமார் லக்‌ஷ்மன், பகீரதன் ஆகியோரே உயிரிழந்த இலங்கைத் தமிழர்களாவர். ஏனைய 10 அகதிகளும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள்.

அவுஸ்திரேலிய அரசாங்கம் இச்சம்பவம் குறித்து இந்தோனிஷிய அரசிடம் விளக்கம் கோரியுள்ளது. ஆனால் இந்தோனேஷிய அரசு இச்சம்பவம் குறித்து எதுவுமே தெரியாது என்று அறிவித்துள்ளது.

உயிரிழந்த இலங்கைத் தமிழர்கள் இருவரும் கடந்த வருடமும் இந்தோனேஷியாவிலிருந்து அவுஸ்திரேலியா செல்வதற்கு இப்படியான ஒரு படகுப் பயணத்தை மேற்கொண்டிருந்ததாகவும், எனினும் அச்சமயம் அவர்களின் முயற்சி முறியடிக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக