15 ஜூன், 2010

பிரச்சினைகளைத் தீர்க்க நடமாடும் சேவை : ம. மா. சபை நடவடிக்கை

மத்திய மாகாண சபை 2000 கிராமங்களின் பிரச்சினைகளைத் தீர்த்து அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் இதுவரை நான்கு நடமாடும் சேவைகளை நடத்தியுள்ளது.

நான்காவது நடமாடும் சேவை நேற்று ஹரிஸ்பத்துவையில் இடம்பெற்றது. அதன்போது அங்கு சமர்ப்பிக்கப்பட்ட சுமார் 1000 பிரச்சினைகளுக்கான தீர்வுகள் வழங்கப்பட்டன என மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா தெரிவித்தார்.

மத்திய மாகாண சபை அமைச்சர்களாக அனுஷியா சிவராசா, சுனில் அமரதுங்க, நிமல் பியதிஸ்ஸ, பந்துல யாலேகம ஆகியோருடன் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்காவும் பிரசன்னமாகி பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தனர்.

இதற்கு முன் மாத்தளை மாவட்டத்தில் வில்கமுவ, நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா, கண்டி மாவட்டத்தில் தெல்தெனியா ஆகிய இடங்களிலும் நடமாடும் சேவைகள் இடம்பெற்றன. நான்காவது நடமாடும் சேவையின் போது, கண்காட்சி உதைப்பந்தாட்டப் போட்டி ஒன்றும் இடம்பெற்றது.

அத்துடன் சுயதொழில் முயற்சி, விவசாயம் போன்றவற்றுக்கான உபகரணங்கள் மற்றும் சுய கடன் திட்டத்திற்கான ஆவணங்கள் என்பனவும் கையளிக்கப் பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக