15 ஜூன், 2010

பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இலங்கை மந்திரி பிரிஸ் பாராட்டு


"பிரதமர் மன்மோகன் சிங், இந்தியாவின் வளர்ச்சியை மட்டுமல்லாது, ஒட்டு மொத்த தெற்காசிய நாடுகளின் வளர்ச்சியையும் கவனத்தில் கொண்டு செயல்படுகிறார்' என, இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரிஸ் பாராட்டியுள்ளார். இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரிஸ், செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்திய பிரதமர் மன்மோகன் சிங், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை மட்டுமல்லாது, ஒட்டு மொத்த தெற்காசிய பிராந்தியத்தையும் கவனத்தில் கொண்டு செயல்படுகிறார். இந்தியாவின் வளர்ச்சியோடு, மற்ற தெற்காசிய நாடுகளும் பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைய வேண்டும் என, அவர் விரும்புகிறார். அதிபர் ராஜபக்ஷேவின் இந்திய சுற்றுப் பயணத்தின் போது, மன்மோகன் சிங்கின் இந்த செயல்பாடு தெரியவந்தது. மன்மோகன் சிங்கின் இந்த முயற்சி பாராட்டத்தக்கது. இவ்வாறு பெரிஸ் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக