25 மே, 2010

இரண்டாவது நீதிமன்ற விசாரணைகளை ரத்துச்செய்யமாறு சரத்பொன்சேகா மனுதாக்கல்

இரண்டாவது நீதிமன்ற விசாரணைகளை ரத்துச்செய்யமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா இன்று மனுதாக்கல் செய்துள்ளார். பொன்சேகாவின் சட்டதரணியால் முன்வைக்கப்பட்டிருந்த இம் மனுவில், இரண்டாவது நீதிமன்ற விசாரணைகளை ரத்துச்செய்யமாறும், தன்னை விரைவில் விடுதலை செய்யுமாறும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஜெனரல் சரத் பொன்சேகா தொடர்பான இரண்டாவது இராணுவ நீதிமன்றம் விசாரணை இன்று இடம்பெற்ற போதே இம் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த விசாரணை எதிர்வரும் ஜூன் மாதம் 3ஆம் திகதி; வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக