25 மே, 2010

யாழ். தாராகுளம் மக்கள் அமைச்சர் டக்ளஸணுடன் சந்திப்பு 24 .ம் திகதி





அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை யாழ். தாராகுளம் குடியேற்றத்திட்ட மக்கள் (24) சந்தித்துக் கலந்துரையாடினர்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் யாழ். அமைச்சுப் பணிமனையில் நேற்று காலை இடம்பெற்ற மேற்படி சந்திப்பின்போது தமது கோரிக்கைகளையும், பிரச்சினைகளையும் எடுத்துரைத்த அக்குடியேற்றத்திட்ட மக்கள் பிரதிநிதிகள் தொடர்ச்சியாக பதினெட்டு வருடங்கள் தாம் அங்கு வசிக்காத நிலையில் வீட்டு உறுதிகள் இழந்த குடியேற்றத் திட்ட உரிமையாளர்களுக்கு வீட்டு உறுதிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும், சேதமடைந்துள்ள தமது வீடுகளை புனரமைப்பதற்கும் உரிய ஏற்பாடுகளை செய்து தருமாறு கேட்டுக்கொண்டனர்.

இவ்விடயத்தில் கூடிய கவனம் செலுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ். பிரதேச செயலாளர் மற்றும் வீடமைப்பு அதிகார சபையின் யாழ். பிராந்திய உதவிப் பொது முகாமையாளர் ஆகியோருடன் தொடர்புகொண்டு விபரங்களை கேட்டறிந்து கொண்டதுடன், தாராகுளம் குடியேற்றத்திட்ட மக்களின் கோரிக்கைகள் விரைவில் தீர்த்துவைக்கப்படும் என உறுதியளித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக