22 மே, 2010

கச்சத்தீவை கண்காணிக்க இந்திய கடற்படை ஆயத்தம்






ராமநாதபுரம் : கச்சத்தீவை கண்காணிக்க இந்திய கடற்படையினர் ஆயத்தமாகி வருகின்றனர். இந்தியா வசமிருந்த கச்சத்தீவு, இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது முதல், தமிழக மீனவர்கள் அப்பகுதிக்கு செல்வது அபாயகரமாகி வருகிறது. மீன்கள் குவிந்து வாழும் கச்சத்தீவு பகுதியில், மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்கி வருகின்றனர். அங்கு சீன வீரர்களை வைத்து இலங்கை ராணுவம் பயிற்சி மேற்கொண்டு வருவதாக குற்றசாட்டும் உள்ளது. தொடர்ந்து அமைதி காத்து வந்த இந்திய அரசு, தற்போது கச்சத்தீவு விவகாரத்தில் கவனம் செலுத்த களமிறங்கி உள்ளது. இதற்காக இந்திய கடற்படை வீரர்களை, இந்தியாவின் எல்லைப் பகுதியில் தீவிர ரோந்து மேற்கொள்ளவும், இலங்கை கடற்படை வீரர்களால் தாக்கப்பட்ட தமிழக மீனவர்களிடம் விவரங்களை அறிந்து கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது கடற்படையினர் ஹெலிகாப்டரில், ரோந்து மேற்கொண்டு வருவதற்கும் இதுவே காரணம். மத்திய அரசின் இந்த முடிவு பலனளிக்கும் பட்சத்தில், இலங்கை கடற்படைக்கு மட்டுமின்றி சீனாவுக்கும் சவாலாக அமையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக