5 பிப்ரவரி, 2010

ஐ. ம. சு. மு. வேட்பாளர் பட்டியலில் திறமையுள்ள இளைஞர்களுக்கு முன்னுரிமை

விண்ணப்பம் ஏற்பு இன்றுடன் பூர்த்தி; நாளை நேர்முகம்



பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் செயல்திறன் மிக்க புதிய முகங்களுக்கும், இளைஞர்களு க்கும் அதிக இடமளிக்கப்படும்.

இவ்வாறு மேல் மாகாண ஆளுனரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேல், மத்திய, ஊவா மாகாண மட்டத்தில் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான குழுவின் உறுப்பினருமான எஸ். அலவி மெளலானா நேற்று தெரிவித்தார்.

பொதுத் தேர்தலில் ஐ. ம. சு. முன்னணியின் அபேட்சகர் பட்டியலில் போட்டியிடவிருக்கும் அபேட்சகர்களைத் தெரிவு செய்யவென ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மூன்று குழுக்களை நியமித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இத் தேர்தலில் ஸ்ரீல. சு. கட்சி சார்பில் ஐ. ம. சு. முன்னணி பட்டியலில் போட்டியிடவிரும்புபவர் கள் இன்று 5 ஆம் திகதிக்குள் தங்களது விண்ணப்பப்படிவங்களை கட்சியின் தலைமையகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், ஸ்ரீல. சு. கட்சி சார்பில் ஐ. ம. சு. மு. பட்டியலில் பொதுத் தேர்தலில் போட்டியிடவிரு க்கும் அபேட்சகர்களைத் தெரிவு செய்யவென ஸ்ரீல. சு. க. மூன்று குழுக்களை நியமித்துள்ளது. வட மேல், வட மத்திய, கிழக்கு, வடக்கு ஆகிய மாகாண மட்ட அபேட்சகர்களைத் தெரிவு செய்வதற்கான குழு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நியமிக்கப்பட் டிருக்கின்றது.

அமைச்சர் டபிள்யூ. டி. ஜே. செனவிரட்ன தலைமையில் மேல், மத்திய, ஊவா மாகாண மட்ட அபேட்சகர்களைத் தெரிவு செய்வதற்கான குழு அமைக்கப்பட்டி ருக்கின்றது.

இவ்விரு குழுக்களும் எதிர்வரும் திங்கட்கிழமை (8 ம் திகதி) காலை 10 மணிக்கு மகாவலி நிலையத்தில் கூடி நேர்முகத் தேர்வு நடத்தும்.

தென் மற்றும் சப்ரகமுவ மாகாண மட்ட அபேட்சகர்களை தெரிவு செய்வதற்கான குழு அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு 9 ம் திகதி மகா நிலையத்தில் கூடி நேர்முகத் தேர்வுகளை நடத்தும்.

வேட்புமனு தொடர்பான மேன்முறைகளை மேற்கொள்ளவென பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க தலைமையில் மற்றொரு குழு அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த ஒவ்வொரு குழுவும் ஆறு பேர் படி உறுப்பினர்களைக் கொண்டிருக்கின்றது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக