5 பிப்ரவரி, 2010

முப்படைகள், பொலிஸ் அணிவகுப்புகளுடன் கண்கவர் கலை, கலாசார நிகழ்ச்சிகள்

கண்டி நகரில் கோலாகலம்


இலங்கையின் 62 வது சுதந்திர தினம் நேற்றுக்காலை கண்டி ஸ்ரீ தலதாமாளிகை வளாக மஹமலுவவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது.

புஅர்ப்பணிப்போம் தாய் நாட்டைக் கட்டியெழுப்புவோம்பூ எனும் தொனியில் நடைபெற்ற இச் சுதந்திர தின நிகழ்வில் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க, சபாநாயகர் டபிள்யூ.

ஜே. எம். லொக்குபண்டார உட்பட அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள் ஆளும் கட்சி, எதிர்க் கட்சி எம்.பிக்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள், ராஜதந்திரிகள், கலைஞர்கள், மதத்தலைவர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்களும் கலந்து கொண்டனர்.

முப்பது வருடகால பயங்கரவாத யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு நாடு முழுமையான சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டுள்ள அமைதிச் சூழலில் நடைபெறும் சுதந்திர தின விழாவாக இம்முறை இந்நிகழ்வு வெகு கோலாகல மாகக் கண்டியில் கொண்டாடப்பட்டது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்டி ஸ்ரீ தலதாமாளிகை வளாகத்தில் கண்டி வாவியையொட்டியதான எழில் மிகு சூழலில் இம்முறை 62 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.

நேற்றுக்காலை 6.30 மணிக்கு கண்டி ஸ்ரீ தலதாமாளிகை, கட்டுக்கலை ஸ்ரீ செல்வ விநாயகர் தேவஸ்தானம், மீராமக்காம் பள்ளிவாசல், புனித அந்தோனியார் பேராலயம், புனித சின்னப்பர் ஆலயம் ஆகியவற்றில் இடம்பெற்ற சமய வழிபாடுகளுடன் சுதந்திர தின வைபவம் ஆரம்பமானது.

கொழும்பிலும் கண்டியிலும் உள்ள தேசபிதா டீ. எஸ். சேனநாயக்கவின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தி கெளரவம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து சுதந்திர தின விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்த முக்கியஸ்தர்களின் வருகை இடம்பெற்றது.

நேற்றுக்காலை 8.47 மணியளவில் ரம்பட் வாத்திய இசை முழக்கத்தின் மத்தியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தம்பதிகளின் வருகை இடம்பெற்றது. முப்படைத் தளபதிகள் பிரதம பதவி நிலை பாதுகாப்பு உத்தியோகத்தர், பொலிஸ் மா அதிபர் ஆகியோரினால் வழங்கப்பட்ட கெளரவ மரியாதைக்குப்பின் மங்கள மேளம் சங்கொலி நாதத்திற்கு மத்தியில் ஜனாதிபதி தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.

இம்முறை தேசிய கீதம் இசைப்பதில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி, கண்டி பதியுதீன் மொகமட் மகளிர் வித்தியாலயம், பேராதனை இந் துக் கல்லூரி மாணவ, மாணவிகள் உட் பட கண்டி, கொழும்பு, தங்காலை, மஹி யங்கனை மாணவ மாணவிகள் நூறுபேர் பங்கேற்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

பாடசாலை மாணவிகளின் ஜயமங்கள கீதத்தைத் தொடர்ந்து ஜனாதிபதிக்கான 21 மரியாதை பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டபின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்.

தரைப்படை, கடற்படை, விமானப்படை, பொலிஸ், சிவில் பாதுகாப்புப் படைகளின் மரியாதை அணிவகுப்பு மற்றும் கலாசார நிகழ்வுகளுடன் இலங்கையின் 62 வது சுதந்திர தின பிரதான தேசிய நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது.

சுதந்திர தின நிகழ்வையொட்டி கண்டி நகரம் பூரண பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டி ருந்ததுடன் நகருக்குள் போக்குவரத்து நடைமுறைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட் டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக