5 பிப்ரவரி, 2010

ஐ.ம.சு. முன்னணியிலேயே தொடர்ந்து இருப்பேன்

மட்டக்களப்பு மாநகர மேயர்



நான் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலேயே தொடர்ந்து இருக்கப் போவதாகவும் ஒருபோதும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை விட்டு விலகவில்லையெனவும் மட்டக்களப்பு மாநகர மேயர் திருமதி சிவகீத்தா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகர மேயர் திருமதி சிவகீத்தா பிரபாகரனிடம் எதிர்கால அரசியல் நடவடிக்கை குறித்து கேட்டபோதே மேற்கண்டவாறு கூறினார். மட்டக்களப்பு மாநகர மேயராக தொடர்ந்திருக்கப் போவதாகவும் இது தொடர்பில் அரசாங்கத்துடன் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பேசியதாகவும் தெரிவித்தார்.

ஒரு போதும் ஐ. ம. சு. மு. வை விட்டு தான் விலகவில்லையெனவும் தொடர்ந்தும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலேயே இருப்பதாகவும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக