3 பிப்ரவரி, 2010


சூரியனில் ஆய்வு நடத்த நாசா திட்டம்!




சூரியனைத் தீப் பிழம்பு என்பார்கள். ஆனால் அந்தப் பிழம்பிலேயே ஆய்வு நடத்தப் போகிறார்கள் விஞ்ஞானிகள்.

இந்த ஆய்வை நடத்த அமெரிக்காவின் 'நாசா' நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் சூரிய மண்டலத்தில் நிகழும் அதிசயங்கள், இதனால் பூமியில் ஏற்படும் குழப்பங்கள் என்பவற்றுக்கும் தீர்வுகாண முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்காக எதிர்வரும் 9 ஆந் திகதி முதல் விண்வெளியில் 'காப்ளக்ஸ் - 41' என்ற ஆய்வகத்தை ஏற்படுத்த முடிவு செய் யப்பட்டுள்ளது. அங்கிருந்து 5 ஆண்டுகள் ஆய்வு நடத்தவும் திட்டமிடப்பட்டிருப்பதாக நாசா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக