3 பிப்ரவரி, 2010


மீள்குடியேற்றப் பணிகள் மீண்டும் ஆரம்பம்: பூநகரி பகுதியில் நேற்று 1000 பேர் மீள்குடியமர்வு

5ம் திகதி மாந்தையில்; 7ம் திகதி முல்லைத்தீவில்



இடம்பெயர்ந்த மக்களை மீள் குடியேற்றும் பணிகள் நேற்று (2) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதாக மீள் குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் செயலாளர் யு. எல். எம். ஹால்தீன் தெரிவித்தார்.

முதற்கட்டமாக கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேசத்தில் ஆயிரம் பேர் தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட்டனர். இவர்கள் பஸ்களில் ஏற்றப்பட்டு நேற்று பிற்பகல் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஐந்தாம் திகதி மற்றொரு பகுதியினர் மாந்தை கிழக்கு பகுதியில் மீளக்குடியேற்ற திட்டமிட்டுள்ளதாக கூறிய அவர், மீள்குடியேற்றப்பட உள்ள குடும்பங்கள் அடையாளங் காணப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். எதிர்வரும் ஏழாம் திகதி முல்லைத்தீவு பகுதியில் மீள் குடியேற்ற பணிகளை முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

கண்ணி வெடிகள் அகற்றும் பணிகளில் ஏற்பட்ட தாமதம், ஜனாதிபதித் தேர்தல் ஆகியவற்றினால் மீள்குடியேற்றச் செயற்பாடுகள் சிலவாரங்கள் தாமதமாகின. ஜனவரி 31 ஆம் திகதியுடன் மீள்குடியேற்றப் பணிகளை பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டபோதும் மேற்படி காரணங்களினால் இந்தப் பணிகள் சற்று தாமதமடைந்தன.

மோதல் காரணமாக வடக்கு, கிழக்கை சேர்ந்த சுமார் 4 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்தனர். இவர்களில் பெரும்பாலான மக்கள் ஏற்கெனவே மீள் குடியேற்றப்பட்டுள்ளதோடு ஒரு இலட்சத்துக்கும் குறைவானவர்களே வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

எஞ்சிய மக்களை மீள்குடியேற்றுவதற்காக கண்ணி வெடிகளை அகற்றும் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கண்ணிவெடிகள் அகற்றப்படுவதற்கு ஏற்ப மக்கள் அந்தப் பிரதேசங்களில் மீள்குடியேற்றப்படுவர் எனவும் ஹால்தீன் கூறினார்.

மீள்குடியேற்றப்படும் மக்களுக்கு 6 மாதத்துக்குத் தேவையான உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதோடு விவசாயம், மீன்பிடித்துறை என்பவற்றை முன்னெடுக்க உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றது. வடக்கில் மீள்குடியேற்றம் நடைபெறும் பிரதேசங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளும் துரிதமாக இடம்பெற்று வருகின்றன.


ஜனாதிபதி படுகொலை சதி முயற்சி: விசேட பொலிஸ் குழுவால் 37 பேர் கைது

பொன்சேகா அலுவலகத்திலிருந்து சதித்திட்ட ஆவணங்களும் மீட்பு



ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் மீதான படுகொலை சதி முயற்சி குறித்து விசாரணைகளை நடத்தி வரும் விஷேட பொலிஸ் பிரிவினர் இதுவரை 37 முக்கிய சந்தேக நபர்களை கைது செய்துள் ளனர்.

கொழும்பிலுள்ள சரத் பொன்சேகா அலுவலகத்தை கடுமையான சோதனைக்கு உட்படுத்திய பொலிஸார் பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதன் மூலம் சதித்திட்டம் தொடர்பான பல முக்கிய தகவல்கள் தெரியவந்துள்ளதாக பொலிஸ் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராணுவப் பொலிஸார், குற்றப் புலனாய்வு பிரிவு மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸார் ஆகியோரின் பங்களிப்புக்களுடன் பல்வேறு கோணங்களில் இந்த விசாரணைகளை முன்னெடுத்து வரும் விசேட பொலிஸ் குழுவுக்கு தேர்ச்சி பெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர் தலைமை தாங்கி வருகின்றார்.

இராணுவ மேஜர் ஜெனரல், பிரிகேடியர் உட்பட இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற பலர் கைது செய்யப்பட்ட 37 பேரில் அடங்குவர். இந்த விசாரணைகள் முடி வுறும் வரை அனைவரும் அவசரகால சட்ட விதிகளுக்கு அமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பிலுள்ள சரத் பொன்சேகாவின் அலுவலகத்தை சோதனைக்குட்படுத்திய போது மாத்திரம் இராணுவத்திலிருந்து தப்பி ஓடிய 22 பேர் கைது செய்யப்ப ட்டுள்ளனர்.

சோதனைக்காக பொன்சேகாவின் அலுவலகத்திற்குச் சென்ற இரகசிய பொலிஸார், அலுவலகம் மூடியிருந்ததை அடுத்து கதவைத் தட்டிய போது உள்ளே இருந்து எந்தவித பதிலும் கிடைக்காததால் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது அலுவலகத்தின் உள்ளே மறைத்திருந்த 23 பேரை கைது செய்துள்ள துடன், சம்பவத்துடன் தொடர்புடைய பல்வேறு ஆவணங்கள், பெயர் விபரங்க ளையும் கைப்பற்றியுள்ளனர். இவர்களில் நால்வரைத் தவிர ஏனைய 19 பேரும் முன்னாள் இராணுவத்தினராவார்கள்.

இதேவேளை தேர்தல் காலத்தின் போது கொழும்பிலுள்ள பொன்சேகாவின் அலுவலகத்தில் இருப்பவர்களின் பாவனைக்காக 500 கையடக்கத் தொலை பேசிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கையடக்கத் தொலைபேசியை பெற்றுக் கொடுத்த முன்னாள் ஜெனரல் ஒருவர் குறித்தும் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பொன்சேகாவின் அரசியல் நடவடிக்கை களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கிய முன்னாள் இராணுவ கெப்டன் ஒருவரே கொழும்பிலுள்ள ஹோட்டலில் அறைகளை பதிவு செய்துள்ளார். இந்தப் பதிவுக்காக ஹோட்டல் முகாமைத்துவத்திற்கு பொய்யான பெயரும், விலாசமும் கொடுக்கப்பட்டுள்ளமையும் இதற்கான முழுக்கொடுப்பனவுகளும் பணமாக செலுத்தப்பட்டுள்ளமையும் விசாரணைகளிலி ருந்து தெரிய வந்துள்ளது.

கொழும்பிலுள்ள இரண்டு நட்சத்திர ஹோட்டல்களில் 70 ற்கும் அதிகமான அறைகள் பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும் பல அறைகள் பாவிக்காமல் வைக்கப்பட்டுள்ளன.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்கள் பாவித்ததாக கூறப்படும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்த மோட்டார் சைக்கிள்களில் பல போலியான இலக்கத்தகடுகளை கொண் டவை. சில வாகனங்கள் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஹோட்டலின் மூன்றாவது மாடியை முழுமையாக ஒதுக்கியிருந்த பொன்சேகாவின் குழுவினர் அந்த ஹோட்டலில் வைக்கப்பட்டிருந்த (ரிவி ஹிய) கண் காணிப்பு கமராக்களை செயலிழக்கச் செய்துள்ளதுடன் அறை உதவியாளர்கள் வருவதையும் தடை செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை மாளிகாவத்தை பிரதேசத்தில் பெளத்த விகாரையிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் மற்றும் பணம் என்பன கொழும்பிலுள்ள சரத் பொன்சேகாவின் அலுவலகத்திலிருந்தே எடுத்துச் செல்லப்பட்டுள்ளமையும் உறுதி செய்யப் பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித் தனர்.

இந்த ஆயுதத்தை விநியோகித்த சந்தேகத்தின் பேரில் 2 தமிழர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவற்றை விநியோகிக்க எட்டு இலட்சம் ரூபா ஒப்பந்தம் பேசப்பட்டுள்ளதுடன் அவற்றில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா முற்பணமாக கொடுக்கப்பட்டுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

62 வது சுதந்திர தின வைபவம்: கண்டியில் நாளை கோலாகலம்

தலதா மாளிகையிலிருந்து ஜனாதிபதி நாளை நாட்டு மக்களுக்கு உரை


இலங்கையின் 62வது சுதந்திர தின பிரதான வைபவம் நாளை காலை கண்டியில் மிக கோலாகலமாக நடைபெறவுள்ளது

கண்டி தலதா மாளிகை வளவில் நடைபெறவுள்ள சுதந்திர தின பிர தான வைபவத்திற் கான சகல ஏற் பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் முப்படை மற்றும் பொலிஸாரின் ஒத்திகைகளும் இடம்பெற்றன.

சுதந்திர தின பிரதான வைபவம் மற்றும் தேசத்திற்கு மகுடம் தேசிய கண்காட்சியை முன்னிட்டு எதிர்வரும் 10ம் திகதி வரை திட்டமிட்ட வகையில் விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இம்முறை சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு கடமைகளுக்கென பத் தாயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸாருடன், பொலிஸாருக்கு உதவியாக முப் படையினரும் ஈடு படுத்தப்பட்டு ள்ள னர்.

சுதந்திர தின த்தை முன்னிட்டு சமய வழிபாடுகள் இடம்பெற்று வருவதுடன் நாளை முதல் எதிர்வரும் 10ம் திகதி வரை பள்ளேகளவில் தேசத்திற்கு மகுடம் தேசிய கண்காட்சியும் நடை பெறவுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் காலை 8.30 மணிக்கு சுதந்திர தின பிரதான வைபவம் ஆரம்ப மாகவுள்ளது. பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க, சபாநாயகர் டபிள்யூ.

ஜே. எம். லொக்குபண்டார, பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் சந்திரசிறி கஜதீர, மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்க நாயக்க, பிரதம நீதியரசர் அசோக்க டி சில்வா, பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக்க, முப்படைக ளின் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் மற்றும் அமைச்சர்கள் உட் பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

முப்படையினர், பொலிஸார், சிவில் பாதுகாப்புப் படையினரின் மரி யாதை அணி வகுப்புகள் பாண்ட் வாத்தியங்களுடன் கலாசார நிகழ்ச் சிகளும் இடம்பெறவுள்ளன.

இம்முறை சுதந்திர தினத்தின் போது கடற்படை, விமானப் படை யின் சாகசங்களும் தவிர்த்து கொள் ளப்பட்டுள்ளதுடன் கனரக வாகன ங்களின் அணி வகுப்புகளும் குறைக் கப்பட்டுள்ளன.

இந்த தேசத்தின் சுதந்திரத்திற்காக உயிர் நீத்தவர்களுக்காக இரண்டு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப் படவுள்ளதுடன் மரியாதை நிமிர்த் தம் 21 பீரங்கி வேட்டுக்களும் தீர்க்கப் படவுள்ளன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலதா மாளிகையிலிருந்து நாட்டு மக்களுக்காக தனது சுதந்திர தின உரையை நிகழ்த்தவுள்ளார்.

முப்படையினருக்கு மேலதிகமாக சுதந்திர தின பிரதான வைபவத்தி ற்காக மூவாயிரம் பொலிஸாரும், தேசத்திற்கு மகுடம் தேசிய கண் காட்சிக்காக ஏழாயிரத்திற்கும் அதிக மான பொலிஸாரும் கடமையில் ஈடுப்படுத்தப்படவுள்ளதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக்க தெரிவித்தார்.

பொது மக்களுக்கு பாதிப்பு ஏற் படாத வகையில் சிறந்த முறையில் பாதுகாப்பு முன்னெடுக்கப்பட்டுள் ளதுடன் கண்டி நகரையும் அதனை அண்டிய சில வீதிகள் தற்காலிகமா கவும், சில வீதிகள் நிகழ்ச்சி நடைபெறும் நேரங்களுக்கும் மூடப்படவுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக