23 பிப்ரவரி, 2010


பிரபாகரனின் மரணத்தை உறுதிப்படுத்த மேலும் ஆவணங்கள் தேவை:இந்தியா






தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உயிரிழப்பை உறுதிப்படுத்த மேலதிக ஆவணங்கள் தேவை என இந்தியா, இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஹிந்துஸ்தான் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்குத் தொடர்பான விசாரணைகளுக்காக இந்த ஆவணங்கள் தேவைப்படுவதாக மத்திய புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.

மரபணு பரிசோதனையின் மூலம் பிரபாகரனின் உயிரிழப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள ஆவணத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும், பிரபாகரனின் உயிரிழப்பு தொடர்பிலான இலங்கையின் ஆவணங்கள் இந்திய நீதிமன்றங்களில் சமர்ப்பிக்கப் போதுமானதாக அமையவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, பிரபாகரனின் மரணத்தை உறுதிப்படுத்திய ஆவணத்தினை இலங்கை வழங்கியுள்ளதாக சி.பி.ஐ. தமக்குத் தெரிவித்ததாக இந்திய உட்துறை அமைச்சர் இம்மாதம் தெரிவித்திருந்தார்.

எனினும் அவ் ஆவணங்கள் பிரபாகரனின் மரணத்தை உறுதிப்படுத்துவதற்கு போதுமானதாக இல்லாமையால் சி.பி.ஐ. இன் பல்தரப்பு ஒழுக்காற்று கண்காணிப்பு முகவர் மேலும் சில ஆவணங்களை அனுப்பி வைக்குமாறு இம்மாதம் இரண்டாவது வாரத்தில் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாக அச்செய்தியில் மேலும்



பொதுத்தேர்தல் குறித்து வடமாகாண மஜ்லிஸுல் சூறா அமைப்பு ஆராய்வு



எதிர்வரும் பொதுத்தேர்தலில் எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் குறித்து ஆராயும் கூட்டமொன்று புத்தளத்தில் இடம்பெற்றுள்ளது.வடமாகாண மஜ்லிஸுல் சூறா அமைப்பின் தலைவர் மௌலவி எஸ்.எச்.எம்.ஏ.முபாறக் (றசாதி) தலைமையில் இக்கூட்டம் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக வட மாகாணத்திலிருந்து இருந்து 1990 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த முஸ்லிம்களது மீள்குடியேற்றம், இழந்த சொத்துக்களுக்கான நஷ்டஈடு, தொழில் வாய்ப்பு, மதவழிபாட்டுத் தலங்கள் புனரமைப்பு போன்ற அம்சங்களை நிறைவேற்றுவதில் முன்னுரிமையளிக்கும் அணியுடன்,தமது அமைப்பு எதிர்வரும் வாரங்களில் பேச்சுக்களை நடத்தவுள்ளது. மேற்படி கலந்துரையாடலின் போது இம்முடிவு எட்டப்பட்டதாக மஜ்லிஸுல் சூறா அமைப்பின் தேசிய அமைப்பாளர் மௌலவி அஜ்மல்.ஏ.காதர் தெரிவித்தார். "முஸ்லிம் விரோத சக்திகளின் கூட்டின் மூலம் சமூகத்துக்கு எந்தவித பலனும் கிட்டியதாக வரலாறுகள் இல்லை. எமது அமைப்பால் முன் வைக்கப்படும் கோரிக்கைகளுக்குக் கிடைக்கும் பதிலின் மூலம்,நாம் சார்ந்து நிற்கும் சமூகத்துக்குக் கிடைக்கும் நன்மையின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படும்" என்றும் தேசிய அமைப்பாளர் மௌலவி அஜ்மல்.ஏ.காதர் மேலும் கூறினார்.




கூட்டமைப்பு முன்னாள் எம்.பி கனகரத்தினம் ஐ.ம.சு.முவில் தேர்தலில் போட்டி



எதிர்வரும் பொதுத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் முல்லைத்தீவு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் போட்டியிடவுள்ளார்.

இம்முறை பொதுத் தேர்தலில் வன்னி மாவட்ட வேட்பாளர் பட்டியலில் பல புதிய உறுப்பினர்களும் உள்ளீர்க்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை 4 சுயேட்சைக் குழுக்கள் தமது கட்டுப்பணங்களைச் செலுத்தியுமுள்ளன

ஆப்கானிஸ்தானில்
ராணுவ விமானத்தாக்குதலில் 33 அப்பாவிகள் பலியானார்கள்




ஆப்கானிஸ்தானின் தெற்கு பகுதியில் தலீபான் தீவிரவாதிகள் என நினைத்து சில வாகனங்களில் பயணம் செய்த அப்பாவிகள் மீது விமானத்தாக்குதல் நடத்தப்பட்டதில் 33 பேர் பலியானார்கள்.

3 மினி பஸ்கள் மீது குண்டு வீச்சு

ஆப்கானிஸ்தானின் தெற்கு பகுதியில் தலீபான் தீவிரவாதிகள் வலுவான நிலையில் இருக்கிறார்கள். அவர்களை ஒடுக்குவதற்காக மர்ஜா என்ற பகுதியில் ராணுவம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்கிடையில் டாய்கண்டி மாநிலத்தில் குஜ்ரான் மாவட்டத்தில் 3 மினி பஸ்கள் வேகமாக விரைந்தன. இந்த வாகனங்களில் தீவிரவாதிகள் தான் பயணம் செய்கிறார்கள் என நினைத்த அமெரிக்க ராணுவம், அவர்கள் மீது விமான தாக்குதல் நடத்தியது. ராணுவ ஹெலிகாப்டர்கள் அந்த வாகனங்களின் மீது குண்டுகள் வீசப்பட்டன. இதில் அந்த வாகனங்களில் இருந்தவர்கள் பலியானார்கள்.

அப்பாவிகள்

இந்த தாக்குதலில் எத்தனை பேர் பலியானார்கள் என்ற விவரங்களை அமெரிக்க ராணுவம் வெளியிடவில்லை. இந்த தாக்குதல் பற்றி ஆப்கானிஸ்தான் அரசு விசாரணை நடத்தியது. அப்போது இந்த வாகனங்களில் பயணம் செய்தவர்கள் அனைவரும் அப்பாவிகள் என்பது தெரியவந்தது.

இதில் பலியான 33 பேரின் உடல்களை அதிகாரிகள் கைப்பற்றினார்கள். 12 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் காந்தகார் நகருக்கு பயணம் செய்த போது இந்த தாக்குதல் நடந்தது. பலியானவர்களில் 4 பேர் பெண்கள். ஒரு குழந்தையும் பலியானது. இந்த தகவல்களை உள்துறை அமைச்சரக செய்தி தொடர்பாளர் செமிரி பாஷாரி தெரிவித்தார்.

மன்னிப்பு கேட்டார்

மலைப்பாங்கான பிரதேசத்தின் பிரதான சாலையில் இந்த மினி பஸ்கள் சென்றது. இந்த பஸ்களில் மொத்தம் 42பேர் பயணம் செய்தனர். அவர்கள் அனைவரும் அப்பாவி பொதுமக்கள் ஆவார்கள். காயம் அடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர்.

அப்பாவிகள் பலியானதற்கு அமெரிக்க தலைமையிலான ராணுவத்தின் தளபதி ஜெனரல் ஸ்டான்லி மெக்கிரைஸ்டல், ஆப்கானிஸ்தான் அதிபர் கர்வியிடம் மன்னிப்பு கேட்டார். அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தான் மக்களை காப்பாற்றுவதற்காக தான் நாம் இங்கே வந்து இருக்கிறோம் என்று நான் படையினருக்கு கூறி இருக்கிறேன். தவறுதலாக அவர்கள் பலியானாலோ அல்லது காயம் அடைந்தாலோ அது நம் மீது உள்ள நம்பிக்கையை தகர்த்து விடும் எனறு கூறி இருக்கிறேன். இருந்தும் இப்போது தவறு நடந்து விட்டது. இதற்காக நான் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் ஸ்டான்லி கூறி இருக்கிறார்.
ஜெனரல் சரத் கைது : அடிப்படை மனித உரிமைமீறல் மனு விசாரணை இன்று





ஜெனரல் சரத் பொன்சேகா கைது விவகாரம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமை மீறல் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற்ற முன்னாள் அதிகாரி ஒருவரை இராணுவச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளமை, அவரது அடிப்படை உரிமையை மீறும் வகையில் அமைந்துள்ளதென மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பதில் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க, நீதவான்களான பாலபட்டபெந்தி மற்றும் கே.ஸ்ரீபவன் ஆகியோரின் முன்னிலையில் மனு மீதான விசாரணைகள் நடத்தப்படவுள்ளது.

இந்த வழக்கு விசாரணைகளைக் கண்காணிப்பதற்கு மனித உரிமை கண்காணிப்பாளர்களும் இன்று உச்ச நீதிமன்றுக்குப் பிரசன்னமாகவுள்ளனர்.

ஜெனரல் சரத் பொன்சேகாவை பிணை அடிப்படையில் விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய, பாதுகாப்புச் செயலாளர், சட்ட மா அதிபர் உள்ளிட்ட சிலர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில்
மேலும் ஒரு தலீபான் தளபதி பிடிபட்டார்


பாகிஸ்தான் நாட்டில் கராச்சி நகரில் பதுங்கி இருந்த தலீபான் இயக்கத்தின் நம்பர் 2 தலைவரான முல்லா ஒமர் பராதர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். பாகிஸ்தான் உளவு துறையான ஐ.எஸ்.ஐ.யுடன் சேர்ந்து அமெரிக்க சி.ஐ.ஏ உளவுதுறை கூட்டாக நடத்திய சோதனையில் அவர் பிடிபட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் தலீபான் இயக்கத்தின் மேலும் ஒரு தளபதி பதுங்கி இருந்த இடம் பற்றிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அவர் பிடிபட்டார். அவர் பெயர் மவுல்வி கபீர் என்பது ஆகும்.

இவர் தலீபான் ஆட்சிக்காலத்தில் நங்காகர் மாநிலத்தின் கவர்னராக இருந்தவர். இவர் அமெரிக்காவால் தேடப்பட்டு வரும் 10 தலீபான் தலைவர்களில் ஒருவர் ஆவார்.

இவர் வடமேற்கு எல்லைப்புற மாநிலத்தில் உள்ள நவ்ஷெரா மாவட்டத்தில் பதுங்கி இருந்தபோது கைது செய்யப்பட்டார்.

இவர் தவிர மேலும் 2 தலீபான் தலைவர்களும் கைதானார்கள். முல்லா சலாம், முல்லா முகமது ஆகிய 2 பேரையும் பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது. இவர்களில் சலாம் ஆப்கானிஸ்தானில் உள்ள குண்டூஸ் மாநிலத்தை சேர்ந்தவர். முகமது பக்லான் மாநிலத்தை சேர்ந்தவர். இவர்களும் முக்கியமான தலீபான் தீவிரவாதிகளாக கருதப்படுகிறார்கள்.

பொது தேர்தலில் 22 பொதுக் கூட்டங்களில் ஜனாதிபதி பங்கேற்பார்



எதிர்வரும் ஏப்ரல் மாதம் 08 ஆம் திகதி நடைபெற உள்ள பொது தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 22 பொதுக் கூட்டங்களில் பங்கேற்க உள்ளார்.

ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்கும் முகமாக ஜனாதிபதி இக் கூட்டங்களில் பங்கேற்க உள்ளார்



தமிழ் மக்களை இந்தியா பழிவாங்க .தே.கூ. துணைபோனது : சிவாஜி-ஸ்ரீகாந்தா





தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா ஆகியோருக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் வலுத்துவருகின்றன.

இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகளை சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா ஆகியோர் முன்வைத்தனர்.

தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற பெயரில் திங்கட்கிழமை கொழும்பு நிப்பொன் ஹோட்டலில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடைபெற்றது.

தமிழ் மக்களைக் கொலை செய்ய துணைபோன இந்தியாவுக்கு உடந்தையாகவும் சோனியா காங்கிரஸ் அரசாங்கத்தின் விருப்பத்திற்கேற்பவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இயங்கியதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஊடகவியலாளர் மாநாட்டின்போது குற்றம் சாட்டினார்.

இது தொடர்பாக எந்தவொரு பகிரங்க விவாதத்திற்கும் தான் தயாராக இருப்பதாக அவர் அறிவித்தார்.

புஇந்த யுத்தத்தை ஆரம்பித்தது இந்தியா தான் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவே சொல்லியிருந்தார்.

உங்களுக்குத் தெரியும், மாவில் ஆறு பிரச்சினையிலிருந்துதான் இது தொடங்கியது.

அந்த நேரத்தில் அதாவது 2006ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக்குழு இந்தியாவுக்குச் சென்றது. எனினும் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்க முடியவில்லை. அதே ஆண்டு டிசம்பர் மாதம் கூட்டமைப்பின் தூதுக்கழு இந்தியப் பிரதமரை சந்தித்தது.

அதன் பின்னர் கிட்டத்தட்ட 28 மாதங்களாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தூதுக்குழு இந்தியாவுக்கு காலடி எடுத்து வைக்கவில்லை. 2007 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 15 இற்கும் அதிகமான வெளி நாடுகளுக்குச் சென்று யுத்தத்தை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்த மூவரும் (இரா.சம்பந்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், மாவை சேனாதிராஜா) இந்தியாவுக்கு செல்லாததன் காரணம் என்ன?

அவர்களின் குடும்பத்தினர் இந்தியாவில் தான் வசிக்கிறார்கள். இந்தியாவுக்கு சென்றபோதும் மறந்தும் புதுடில்லிக்கு செல்லாததற்கான காரணம் என்ன?

எங்களால் இந்தியாவுக்கு சென்று அங்குள்ள முக்கிய பிரதிநிதிகளைச் சந்திக்க முடியுமாக இருந்தால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஏன் அந்த முயற்சியை எடுக்கவில்லை?

இதிலிருந்து இந்திய அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே இவர்கள் செயற்படுகிறார்கள் என்பது புலனாகிறது.

அதுவரை இந்திய அரசாங்கத்திடம் எதுவும் கோராதவர்கள் 2009 ஆண்டு ஏப்ரல் மாதம் சந்திப்புக்கான கோரிக்கை விடுத்தார்கள். அதற்காக எமது உறுப்பினாகள் 14 பேர் கூடினார்கள். இவர்களில் 13 பேர் அங்கு போகக் கூடாது என எதிர்த்தார்கள்.

இரா.சம்பந்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் புதுடில்லிக்குச் சென்றனர்.

நான் லண்டனிலிருந்து அவசரமாக வந்து, இந்தியா துரோகமிழைக்கிறது, செல்ல வேண்டாம் எனச் சொன்னேன்.

இந்த வேண்டுகோள் எனக்கூடாக விடுதலைப் புலிகளால் இவர்களுக்கு விடுக்கப்பட்டது.

புலிகளால் நேரடியாகவும் கூட அவர்களுக்குச் செய்தி அனுப்பப்பட்டது.

ஆனால் அதனையும் மீறிச் சென்றார்கள் என்றால் அதற்கான காரணத்தை நீங்களே தீர்மானித்துக் கொள்ளங்கள்.

இந்திய பொதுத் தேர்தலிலே தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை வெற்றிபெறச் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட ஏமாற்று முயற்சிகளிலே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பகடைக்காயாகப் பாவிக்கப்பட்டது.

இவர்களும் அதில் விரும்பி கலந்து கொண்டார்கள் என்பதுதான் எங்களுடைய பகிரங்க குற்றச்சாட்டு. இதைப்பற்றி வேண்டிய நேரத்தில் வாதாடவும் தயாராகவுள்ளோம்" என்றார் சிவாஜிலிங்கம்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகாந்தா உரையாற்றுகையில்,

"சோனியா அரசுக்கு விசுவாசமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றக் குழு இருக்க வேண்டும் என இந்தியா விரும்புகிறது.

கிளர்ச்சியாளர்கள், தட்டிக்கேட்பவர்கள், இந்தியாவின் துரோகத்தைப் பற்றி கடந்த காலத்தில் பேசியவாகள் இருக்கக் கூடாது என்பதில் சோனியா காங்கிரஸ் அரசாங்கம் தீர்மானமாக இருக்கிறது" என்றார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது புதிய இடதுசாரி முன்னணித் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன பார்வையாளராக வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக