23 பிப்ரவரி, 2010

விண்வெளியில் புதிய சூரியன் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு















விண்வெளியில் சூரிய குடும்பத்துக்கு அப்பால் பல்வேறு சூரியன்களும் அதன் துணை கிரகங்களும் உள்ளன. அவற்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து வருகின்றனர்.

தற்போது புதிதாக ஒரு சூரியனை கண்டு பிடித்துள்ளனர். இதற்கு பிடி+20 1790 பி என பெயரிட்டுள்ளனர். இது ஜுபிடர் கிரகத்தை விட 6 மடங்கு பெரியது.

இது சூரியனின் சுற்றுப்பாதையில் உள்ள மெர்குரி கிரகத்துக்கு மிக அருகில் உள்ளது. இது பூமியில் இருந்து 83 ஒளி ஆண்டுகள் (லைட் இயர்) தூரத்தில் உள்ளது. ஆனால் அளவில் சூரியனை விட சிறியது.

இந்த புதிய சூரியன் 3 1/2 கோடி ஆண்டு பழமையானது என்று கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு முன்பு புதிதாக கண்டுபிடித்த கிரகம் 10 கோடி ஆண்டு பழமை வாய்ந்தது என விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர்.

இந்த புதிய சூரிய கிரகம் குறித்து மரிய குருஷ் கால்லெஷ் மற்றும் ஜான்பர்னஸ் தலைமையிலான சர்வதேச விண்வெளி விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.


சரத்
பொனேசாகா கைது:வழங்கு விசாரணை 26 ஆம் திகதி ஒத்திவைப்பு





ஜெனரல் சரத் பொன்சேகா கைது விவகாரம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமை மீறல் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்கினை விசாரித்த நீதவான் ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்கு மறுத்துள்ள அதேவேளை அவரது நெருங்கிய உறவினர்கள் மற்றும் சட்டத்தரணிகளை சென்று பார்க்க அனுமதி வழங்கியுள்ளார்.

அனோமா பொன்சேகாவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமை மீறல் தொடர்பான இவ்வழங்க்கு தொடர்பான விசாரணைகள் இம்மாதம் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் ஜெனரல் சரத் பொன்சேகாவின் பாரியார் அனோமா பொன்சேகா, ஐக்கிய தேசிய கட்சியின் உபதலைவர் கரு ஜயசூரிய,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன , மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி ஆகியோர் வருகை தந்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக