13 பிப்ரவரி, 2010

வேட்புமனுத் தாக்கலுக்கு இன்னும் 5 தினங்கள்:
தேர்தல் கூட்டு, வேட்பாளர் தெரிவில் கட்சிகள் இறுதிக்கட்ட பிரயத்தனம்



பொதுத்தேர்தலுக்கான வேட்பாளர் நியமனப்பத்திரங்களைத் தாக்கல் செய்வதற்கு இன்னும் ஐந்து நாட்களே எஞ்சியுள்ள நிலையில், தேர்தல் கூட்டுக்களை அமைப்பதிலும் வேட்பாளர்களைத் தெரிவதிலும் அரசியல் கட்சிகள் இறுதிக்கட்ட பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளன.

கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு ஆசனங்களை ஒதுக்கிக் கொடுப்பதிலேயே இறுக்கமான நிலை காணப்படுவதாக அரசியல் கட்சி வட்டாரங்கள் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட் பாளர்களைத் தெரிவு செய்வதற்கான நேர்முகத்லீ தர்வுகளை ஏற்கனவே நடத்தி முடித்துள்ளன. அவற்றின் விபரங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குக் கையளிக்கப்பட்டுள்ளதுடன், சில மாவட்டங்களின் விபரங்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (14) அல்லது நாளை திங்கட்கிழமை கையளிக்கப்படுமென எதிர்பார்க் கப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் கூட்டுக் கட்சிகள் பெரும்பாலும் அரசாங்கத் தரப்புடன் இணைந்தே போட்டியி டலாமென நம்பப்படுகிறது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, இலங்கை சமசமாஜக் கட்சி, தேசிய சுதந்திர முன்னணி, ஜாதிக ஹெல உறுமய உள்ளிட்ட கட்சிகள் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

எனினும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, மலையக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் தனித்துக் களமிறங்குவதாகத் தெரிவித்துள்ள போதிலும், இன்னமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக ஆளுந்தரப்பு முக்கியஸ்தர் ஒருவர் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார். அதே போல், தமிஸழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் இன்ன மும் ஆலோசனை நடத்தி வருகின்றன.

இதேவேளை, கூட்டணிக் கட்சிக ளுக்கு ஆசனங்களை ஒதுக்குவது தொடர்பான இறுதித் தீர்மானத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே மேற்கொள்வாரென்று வேட்பாளர் தெரிவுக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான மேல் மாகாண ஆளுநர் எஸ். அலவி மெளலானா தெரிவித் தார்.

இது குறித்து அரசியல் கட்சிகளு டன் கலந்தாலோசனைகள் இடம் பெற்று வருவதாக ஆளுநர் குறிப்பி ட்டார்.

இது இவ்வாறிருக்க, ஐக்கிய தேசி யக் கட்சியின் தலைமையிலான எதி ர்க் கட்சிக் கூட்டணி பல பிரிவுக ளாகப் பிளவுபடும் சூழல் ஏற்பட் டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து பொதுத் தேர் தலில் யானைச் சின்னத்தில் போட்டி யிடுவதென ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. எதிர்காலத்தில் அனைத்துத் தேர்தல்களிலும் யானைச் சின்னத்திலேயே போட்டியிடுவ தென முடி வெடுக்கப்பட்டுள்ளதாக வும் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார். இந் நிலையில் ஜன நாயக மக்கள் முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சி களும் யானைச் சின்னத்திலேயே களமிறங்கவுள்ளன.

பொதுத் தேர்தலில் யானைச்சின் னத்தில் போட்டியிடத் தீர்மானித்து ள்ளதால் மக்கள் விடுதலை முன் னணி தனித்து விடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள் ளது. இந் நிலையில் ஜே.வி.பி. அதன் மணிச் சின்னத்தில் போட்டியிடுமெனத் தெரியவருகிறது.

மேலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அதன் வேட்பாளர் பட்டி யலை எதிர்வரும் 20 ஆம் 21 ஆம் திகதியளவில் பூர்த்தி செய்துவிடு மென முன்னாள் அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.

ஏனைய கட்சிகளும் வேட்பாளர்க ளைத் தெரிவதில் தீவிரம் காட்டி வருகின்றன.

கூட்டணியில் இருந்து தனித்து விடப்பட்டிருக்கும் கட்சிகள் இறுதி நேரத்தில் வேட்பாளர்களைத் தேடு வதில் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றன.


அரசியல் தீர்வு பற்றி இவர்கள் பேசுவது தமிழ் மக்களின் துரதிஷ்டம்

கடந்த சில நாட்களாக சரத் பொன்சேகாவின் கைது தான் சூடான விவகாரம். ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின் சோர்ந்து போயிருந்த எதிரணிக் காரர்கள் அவல் கிடைத்தது போல நன்றாக மெல்கிறார்கள்.

பொன்சேகாவின் கைதுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியும் ஜே. வி. பியும் கடந்த புதன்கிழமை உச்ச நீதிமன்றத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

உச்ச நீதிமன்றத்தை எதற்காகத் தேர்ந் தெடுத்தார்களோ தெரியாது. இது பெரும்பாலும் ஐக்கிய தேசியக் கட்சியின் தெரிவாக இருக்கலாம். நீதிமன்றத்துடனும் நீதியரசர்களுடனும் முரண்படும் பாரம்பரியம் அந்தக் கட்சிக்குத் தாராளமாக உண்டு.

ஜே. ஆர். ஜயவர்த்தன புதிய அரசியலமைப்பை நடைமுறைக்குக் கொண்டுவந்த வேளையில் உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் எல்லோரையும் இராஜினாமா செய்ய வைத்துத் தான் விரும்பியவர்களை நியமித்தார். அரசாங் கத்துக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளின் வீடுகளுக்குக் கல்லெறிந்த கதையும் உண்டு.

இந்த ஆர்ப்பாட்டம் நடக்கவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டதென்பதை விளங்கிக் கொள்வ தற்கு அதிக நேரம் எடுக்காது. எதிர்ப்புத் தெரிவிக்கும் ஆர்ப்பாட்டமென்றால் அமைதியாக எதிர்ப்பைத் தெரிவித்திருக் கலாம்.

இவர்கள் குழப்பம் விளைவிக்கும் நோக்கத்துடனேயே வந்திருக்கின்றார்கள். அதனாலேயே பொலிசாருக்கு ஆத்திர மூட்டும் விதத்தில் நடந்திருக்கின்றார்கள்.

அதன் மூலம் பொலிசாரைக் கடுமையான நடவடிக்கை எடுக்க வைப்பதே அவர்களின் நோக்கம். அதைத் தேர்தல் மேடைகளில் பிரசாரம் ஆக்கலாமே.

பொன்சேகாவின் கைதுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஜே. வி. பியும் பிழையான ஒரு கோஷத்தை முன்வைக்கின்றன.

பொன்சேகா சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டார் என்பதே அந்தக் கோஷம். எந்தச் சட்டத்துக்கும் உட்படாத வகையில் கைது செய்யப்படுவதே சட்டவிரோதமான கைது.

பொன்சேகா சட்டத்துக்கு உட்பட்ட வகையிலேயே கைது செய்யப்பட்டார். இராணுவ சட்டத்தின் 57வது சரத்தின் கீழேயே அவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். அந்தச் சரத்தில் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது.

புஇராணுவச் சட்டத்துக்கு உட்பட்ட ஒருவர் ஏதாவது குற்றச் செயலைப் புரிந்து அதன்பின் இராணுவச் சட்டத்துக்கு உட்படாதவர் என்ற நிலையை அடையும் பட்சத்திலும் அவரைக் கைதுசெய்து இராணுவப் பாதுகாப்பில் வைத்திருப் பதற்கும் இராணுவ நீதிமன்றத்தினால் விசாரித்துத் தண்டனை வழங்குவதற்கும் முடியும்.

குறித்த குற்றச் செயல் இராணுவக் கிளர்ச்சி, இராணுவத்தைக் கைவிட்டுச் செல்லல், முறைகேடான ஆட்சேர்ப்பு ஆகியவை அல்லாததாயின் அக் குற்றச்செயல் இடம்பெற்று ஆற மாத காலம் கடந்த பின் அவரைக் கைது செய்து விசாரிக்க முடியாது.பூ

பொன்சேகா மீதான குற்றச்சாட்டுகளை இராணுவ நீதிமன்றம் விசாரித்து அதன் தீர்ப்பை வழங்கும்.

பொன்சேகாவின் கைது விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஜே. வி. பியும் ஒன்றாகச் செயற்படுகின்ற போதிலும் பாராளுமன்றத் தேர்தலில் அதற்கான வாய்ப்பு இல்லை.

பாராளுமன்றத் தேர்தலில் அன்னம் சின்னத்தில் கூட்டாகப் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியைச் சம்மதிக்க வைக்கும் தீவிர முயற்சியில் ஜே. வி. பி ஈடுபட்டிருக்கின்ற போதிலும் அது சாத்தியமாகுவதற்கான அறிகுறிகள் இல்லை.

ஜே. வி. பியைப் பொறுத்தவரையில் பிரதான கட்சியொன்றுடன் கூட்டுச் சேராவிட்டால் பாராளுமன்ற அங்கத்து வத்தை முழுமையாக இழக்கும் நிலை. சென்ற தடவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து பாராளு மன்றத்தில் கணிசமான ஆசனங்களைப் பெற்றார்கள்.

இந்தத் தடவை அதே பாணியில் ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்குகளால் பாராளுமன்ற ஆசனங்களைத் தக்க வைத்துக்கொள்ள முயற்சிக்கின்றார்கள். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி அதற்கு இடங்கொடுப்பதாக இல்லை.

எந்தச் சின்னம் என்பது ஐக்கிய தேசியக் கட்சிக்கு இப்போது ஜீவமரணப் போராட்டம் ஆகிவிட்டது. ஜனாதிபதித் தேர்தலில் அன்னம் சின்னத்தை ஏற்றுக்கொண்டதால் ஐக்கிய தேசியக் கட்சித் தலைமைக்கு எதிரான உணர்வலை கட்சியின் சகல மட்டங்களிலும் வளர்ந்திருக்கின்றது.

மீண்டும் அன்னம் சின்னத்தை ஏற்றால் கட்சி கரைந்துவிடும் என்பது ரணிலுக்குத் தெரியும். அதனால் யானைச் சின்னத்திலேயே போட்டி என்பதில் ரணில் உறுதியாக நிற்கின்றார்.

இந்த நிலையில், பாராளுமன்றத் தேர்தலுக்காக வேறு சில கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அமைக்கும் முயற்சி யிலும் ஜே. வி. பி இறங்கியிருக்கின்றது. ஜே. வி. பிக்கு எப்படியாவது வேறு கட்சிகளின் உதவி தேவை. இல்லையெ ன்றால் பாராளுமன்றத்தை நினைத்தும் பார்க்க முடியாது.

இந்தக் கூட்டணி அமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டங்களில் மனோ கணேசனும் பங்குபற்றியிருக்கின்றார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பிரமுகர் யோகராஜன் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்த பின் மனோ கணேசனுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையிலான உறவில் ஒரு கீறல் ஏற்பட்டிருக்கின்றது.

யோக ராஜனும் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளராகக் கொழும்பு மாவட்டத்தில் களமிறங்குவது தனக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று மனோ கணேசன் கருதுகின்றார் போலும்.

ஜே. வி. பி அமைக்கவுள்ள புதிய கூட்டணி அன்னம் சின்னத்தில் போட்டி யிட முடியாது. அந்தச் சின்னத்துக்குரிய கட்சியான புதிய ஜனநாயக முன்ன ணியை ஸ்தாபித்தவர் ஐக்கிய தேசியக் கட்சியின் ரவி கருணாநாயக்க.

சின்னத்தை ஜே. வி. பி கூட்டணிக்கு வழங்க அவர் தயாராக இல்லை. இப்போது ஐக்கிய ஜனநாயக முன்னணியின் முயல் சின்னத்தில் போட்டியிடுவது பற்றி ஆராய்கின்றார்கள்.

ஜனாதிபதித் தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் அணியில் நின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இனங்காட்ட விரும்பவில்லை.

தனித்துப் போட்டியிடப் போவதாகக் கூட்டமைப்பின் சில முக்கிஸ்தர்கள் கூறுகின்றார்கள். அதே நேரம், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து போட்டியிடப் போவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சொல்கிறார்.

ஹக்கீம் தமிழ் மக்களின் வாக்குகளுக்குள் ஒழிந்துகொண்டு பேசுகின்றார் என்று அமைச்சர் அதாஉல்லா அண்மையில் ழிடுசிச்:!சிநியிருந்தார்.

கிழக்கில் ஜனாதிபதிக்கு எதிராக அளிக்கப்பட்ட வாக்குகளில் பெரும்பான்மையானவை தமிழ் மக்களின் வாக்குகள் என்பதும் அந்த வாக்குகளையும் முஸ்லிம் காங்கிரஸின் கணக்கில் போட்டு ஹக்கீம் உரிமை கோருகின்றார் என்பதும் அமைச்சர் அதாஉல்லாவின் குற்றச்சாட்டு.

கூட்டாகச் செயற்பட்டு இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அணி சேர்வதாக ரவூப் ஹக்கீம் கூறுவது வேடிக்கையாக இருக்கின்றது.

ஏனென் றால் இரண்டு கட்சிகளிடமும் இனப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் இது வரையில் இல்லை.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் பங்காளியாக இருந்த காலத்திலேயே புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

ரவூப் ஹக்கீம் அப் பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றினார். பேச்சுவார்த்தையின் போதென்றாலென்ன வேறு சந்தர்ப்பத்தி லென்றாலென்ன இனப் பிரச்சினையின் தீர்வுக்கான கட்சிக் கொள்கையை முஸ்லிம் காங்கிரஸ் முன்வைக்கவில்லை. முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் தீர்வுக் கொள்கை என்னவென்பது இன்று வரை எவருக்கும் தெரியாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திரிசங்கு சொர்க்கத்தில் நிற்கின்றது. புலிகளின் நிகழ்ச்சி நிரலை முழுமையாக ஏற்றுத் தனிநாட்டுப் போராட்டத்துக்குக் கைகொடுத்தார்கள். இப்போது புலிகள் இல்லை. தனிநாட்டுக் கோரிக்கையும் இல்லை.

கூட்டமைப்பினர் தாங்கள் தனிநாட்டுக் கொள்கையைக் கைவிட்டுவிட் டதாக வெளிப்படையாகச் சொல்லவும் முடியவில்லை. ஐக்கிய இலங்கையில் அரசியல் தீர்வு என்ற நிலைப்பாட்டுக்கு வந்திருப்பதாகச் சொல்லவும் முடியவி ல்லை.

அதனால், தீர்வுத் திட்டமொன்றைத் தயாரித்துக் கொண்டிருக்கிறோம் என்கின்றார்கள். எவ்வளவு காலத்துக்கு இந்தத் திட்டம் தயாரிப்பு நிலையில் இருப்பது? இனப் பிரச்சினையின் தீர்வுக்கான கொள்கை எதுவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இல்லை என்பதே உண்மையான நிலை.

கொள்கை இல்லாத இரண்டு கட்சிகள் சேர்ந்து இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப் போவதாகச் சொல்கின்றார்கள். ஆண்டிகள் மடம் கட்டின கதை நினை வுக்கு வருகின்றது-

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவுக்குக் கட்டுப்படாமல் ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்ட சிவாஜிலிங்கம் பாராளுமன்றத் தேர்தலிலும் தனி வழி போகின்றார் என்று செய்திகள் வெளிவருகின்றன.

ஜனாதிபதித் தேர்தலில் இவர் சேர்ந்திருந்த விக்கிரமபாகு கருணாரட்னவுடன் பாராளுமன்றத் தேர்தலிலும் கூட்டுச் சேரப் போகின்றாராம். பிபுதிய இடதுசாரி விடுதலை முன்னணிபீ என்ற பெயரில் ஒரு அமைப்பைப் பாராளுமன்றத் தேர்தலுக்காக இருவரும் சேர்ந்து உருவாக்கப் போகின்றார்கள் என்று அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகின்றது-

ஜனாதிபதித் தேர்தல் பிரசார மேடைகளில் சிவாஜிலிங்கமும் விக்கிரமபாகுவும் தமிழ் மக்களின் துன்பங்கள் பற்றியும் இனப் பிரச்சினையின் தீர்வு பற்றியும் அதிகம் பேசினார்கள். ஆனால் தாங்கள் முன்வைக்கும் அரசியல் தீர்வு என்ன என்பதை இவர்களில் ஒருவராவது தெளிவுபடுத்தவில்லை.

தனிநாடு நடைமுறைச் சாத்தியமில்லை என்பது புலிகளின் தோல்விக்குப் பின் நிரூபணமாகியுள்ளது. இந்த நிலையில், இனப்பிரச்சினை பற்றிப் பேசும் தலைவர்கள் தாங்கள் முன்வைக்கும் தீர்வு என்ன என்பதைத் தெளிவாகக் கூறுவதற்குக் கடமைப்பட்டுள்ளனர். சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்வு என்று விக்கிரமபாகு கருணாரட்ன நீண்ட காலமாகக் கூறிவருகின்றார்.

சுயநிர்ணய உரிமையைப் பிரி ந்துசெல்வதற்காகப் பிரயோகிக்க வேண்டுமா அல்லது ஐக்கிய இலங் கைக்குள் பிரயோகிக்க வேண்டுமா என்பது பற்றி மக்களுக்குக் கூறும் அறிவுரை என்ன என்ற கேள்விக்கு அவரிடம் தெளிவான பதில் இல்லை.

அதைத் தமிழ் மக்கள் தீர்மானிக்க வேண்டும் என்று கூறிச் சமாளிக்கிறார். தமிழ் மக்கள் தீர்மானிக்க வேண்டும் என்பதில் கருத்துவேறுபாடு இல்லை. சுயநிர்ணய உரிமை பற்றிப் பேசும் எல்லா அரசியல் கட்சிகளும் அதை எவ்வாறு பிரயோகிப்பது என்று தமிழ் மக்களுக்கு அறிவுரை கூறக் கடமைப்ப ட்டுள்ளன.

அதாவது சுயநிர்ணய உரி மையின் பிரயோகம் பற்றிய கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தக் கட மைப்பட்டுள்ளன. அதை வெளிப்படுத்தா விட்டால் கட்சியிடம் திட்டவட் டமான கொள்கை இல்லை என்று அர்த்தம்.

இனப் பிரச்சினையைப் பிரதான பேசுபொருளாகக் கொண்டு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட இருப்பவர்களிடம் பிரச்சினையின் தீர்வுக்கான கொள்கை எதுவும் இல்லாதிருப்பது தமிழ் மக்களின் துரதிஷ்டம்.


இந்திய திஹிணி வலையமைப்பில் இணைய இலங்கை வங்கி திட்டம்

பிடாடாபீ நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை



இந்தியாவில் உள்ள சகல வங்கிகளினதும் ஏ.ரி.எம். (திஹிணி) வலையமைப்புடன் இணைந்து கொள்வதற்கு இலங்கை வங்கி நடவடிக்கை எடுத்து வருவதாக வங்கியின் தலைவர் கலாநிதி காமினி விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பாக பிடாடாபீ நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வங்கியின் தலைவர் கூறினார். இந்தியாவில் உள்ள பத் தாயிரத்திற்கும் அதிகமான ஏ.ரி.எம். வலையமை ப்புகளுடன் இலங்கை வங்கி இணைந்துகொள் வதன் மூலம், இலங்கையில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் இந்தியாவில் எந்தவொரு வங்கியின் ஏ.ரி.எம். இயந்திரத்திலும் பணத்தை மீளப்பெற முடியும் என கலாநிதி காமினி விக்கிரமசிங்க கூறினார்.

இந்தியாவின் சென்னை மாநகரத்தில் மட்டுமே தற்போது இலங்கை வங்கியின் கிளை இயங்கி வருகிறது. அதனால் இலங்கை வங்கியின் ஏ.ரி.எம். அட்டைகளைப் பயன்படுத்தி சென்னையில் மட்டுமே பணத்தை மீளப்பெற முடிகிறது.



ரூ. 285 மில். பெறுமதியான இயந்திர உபகரணங்கள் சீனாவினால் கையளிப்பு


வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் முல்லைத் தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா பகுதி களில் வீதி அபிவிருத்தி, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவென சீன அரசு 285 மில்லியன் ரூபா பெறுமதியான இயந்திர உபகரணங்களை நேற்று வழங்கியது.

இலங்கையிலுள்ள சீனத் தூதுவர், பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்காவிடம் இவற்றை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

பெக்கோ இயந்திரங்கள், மோட்டார் கிறேடர்கள், புல்டோசர்கள் என்பன இவற்றில் அடங்குகின்றன. கொழும்பு காலிமுகத்திடலில் கையளிப்பு வைபவம் நடைபெற்றது.

சீன நாணயப்படி 17 மில்லியன் யுவான்கள் என கணக்கிடப்பட்டுள்ளதுடன் இவை சீன அரசு அன்பளிப்பாகவே வழங்குகிறது என தேச நிர்மாண அமைச்சின் செயலாளர் டபிள்யூ. கே. கே. குமாரசிறி தெரிவித்தார்.

நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை மேலும் 5 மிதிவெடிகள், கண்ணிவெடிகள் அக ற்றும் இயந்திரங்களும் கொண்டு வரப்படவுள்ளன.

ஐக்கிய நாடுகள் மேலும் 5 இயந்திரங்களை இலங்கைக்கு வழங்குகிறது என்றும் செயலர் குமாரசிறி தெரிவித்தார்.



எனது கணவருக்கு செய்த பாவத்தின் பழியை பொன்சேகா அனுபவிக்கிறார்

மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிபிட்டியவின் மனைவி



சரத் பொன்சேகா எனது கணவரை நியாயமற்ற வகையில் இராணுவத்திலிருந்து ஒதுக்கியபோது மிகவும் வேதனைப்பட்டேன். ஒரு பெண்ணாக தனிமைப்படுத்தப்பட்டது போன்று உணர்ந்தேன். அதற்காக ஒவ் வொருவரிடமும் முறையிடப் போகவில்லை. பெண்கள் அமைப்புக்களின் ஆதரவைத்திரட்ட முனையவில்லை. கடவுளிடம் மட்டுமே முறையிட்டேன்.

ஆனால், எனது கணவருக்கும் ஏனை யோருக்கும் செய்த பாவத்தையும் பழி யையும் இன்று சரத் பொன்சேகாவும் அவரது மனைவி அனோமாவும் அனு பவித்துக் கொண்டிருக்கிறார்கள் என கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பாகவிருந்த இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிபிட்டியவின் மனைவி அச்சினி இரோமா தெரிவித்துள்ளார்.

எனது கணவரும் சிங்க ரெஜிமன்ட்டைச் சேர்ந்தவர்தான். அநாமதேய அவதூறு குற்றச்சாட்டை வைத்துக் கொண்டு எனது கணவரை இராணுவத்திலிருந்து விலக்கினார். சரத் பொன்சேகாவின் மனைவியுடன் மிகவும் நெருங்கிய உறவுகளை நான் வைத்திருந்த போதும் எனது கணவருக்கு இவ்வாறு நடந்தது.

ஆனால் இன்று சரத் பொன்சேகாவுக்கு இப்படி நடந்தவுடன் அவரது மனைவி ஒவ்வொருவரிடமும் முறையிடுவதும் பெண்கள் அமைப்புக்களை ஆதரவு வழங்கக்கோரி அழைப்பு விடுப்பதுமாக இருக்கிறார். முன்செய்த பாவங்கள் பலித்துக் கொண்டிருப்பதாகவே நான் கருதுகிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

சரத் பொன்சேகா இன்று தண்டனை பெறும் போது அவரது பிள்ளைகள் பெரியவர்களாக இருக்கிறார்கள். எனது கணவர் விலக்கப்படும் போது எனது மூத்த பிள்ளைக்கு 12 வயது. ஏனைய இரண்டு பிள்ளைகளும் 4 வயதையும், 5 வயதையும் உடையவர்களாக இருந்தனர்.

கணவர் கைது செய்யப்பட்ட போது இந்தக் குழந்தைகளுடன் தனிமைப்படுத்தப் பட்டேன்.

குழந்தைகளுடன் வீதியிலிறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. உத்தியோக பூர்வ இல்லத்திலிருந்து ஒரு மாதத்திற்குள் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தில் எமக்கு உதவியது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே.

அவரது மனிதாபிமானம், காருண்யம் என்பவற்றால்தான் அதிக பெரும்பான்மை வாக்குகளால் வென்று மீண்டும் ஜனா திபதியாகியிருக்கிறார் என்றும் அவர் தெரிவித்தார்

மாத்தளை: சத்துணவு நஞ்சாகிய விவகாரம்:
பாடசாலைக்கு உணவு வழங்கிய கொந்தராத்துக்காரர் கைது




சத்துணவு நஞ்சாகி 10 வயது மாணவி பலியாகி 129 மாணவர்கள் சுகவீனமடைந்தது தொடர்பாக பாடசாலைக்கு உணவு வழங்கிய கொந்தராத்துக்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தளை, பலாபக்வெல புத்தகோஸ சிங்கள மகா வித்தியாலயத்தில் சத்துணவு உட்கொண்ட மாணவர்களில் தனஞ்சனி கமகே என்ற 10 வயது மாணவி மரணமடைந்தார். மேலும், 129 மாணவர்கள் சுகவீனமடைந்து மாத்தளை ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டனர்.

கொந்தராத்துக்காரரால் பாடசாலை மாணவர்களுக்கென வழங்கப்பட்ட சத்துணவு நஞ்சாகியதாலேயே இந்த சம்பவம் நடத்திருக்கிறதென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்தே கொந்தராத்துக்காரர் கைது செய்யப் பட்டிருப்பதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவர்களில் 60க்கும் மேற்பட்டவர்கள் வீடு திரும்பியுள்ளனர். ஏனையவர்களின் இரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட பின்னர் அவர்களையும் வீடுகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படுமென மாத்தளை ஆஸ்பத்திரி அத்தியட்சகர் டாக்டர் கே. டபிள்யூ. எஸ். குமாரவன்ச தெரிவித்தார். எவருக்கும் உயிராபத்தில்லை யெனவும் அவர் கூறினார்.

மேற்படி பாடசாலை உட்பட தொம்பவெல மற்றும் கவட்டயாமுன பாடசாலைகளில் கல்வி கற்கும் கீழ் பிரிவு மாணவர்களே மாத்தளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

போஷாக்கு உணவாக வழங்கப்பட்ட நூடில்ஸ் முட்டை, சொதி என்பனவுடன் மாணவர்களின் வாந்தி மற்றும் மலம் என்பன மேலதிக ஆய்வுகளுக்காக உடனடியாக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரி கே. டப். எஸ். குமார வன்ஸ மேலும் தெரிவிக்கின்றார்.

இது சம்பந்தமான பொலிஸ் விசாரணை மாத்தளை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி திலக் அபேசிரிவர்தனவின் பணிப்புரையின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜயம்பதா பண்டார மேற்கொண்டுள்ளார்.

ஊழல் மோசடிக் குற்றச்சாட்டு:
கண்டி மேயர் அலுவிகார பதவியிலிருந்து நீக்கம்



ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிப் பொறுப்பிலுள்ள கண்டி மாநகர சபையின் மேயர் எல். பி. அலுவிகாரவை பல்வேறு ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் காரணமாக அப்பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளதாக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா தெரிவித்தார்.

மேயர் எல். பி. அலுவிகார தொடர்பாகக் கிடைத்த பல்வேறு ஊழல் மோசடிகள் தொடர்பான ஆரம்ப விசாரணைகளின் பின்னரே அவரை அப்பதவியிலிருந்து உடனடியாக நீக்கத் தீர்மானித்ததாக முதலமைச்சர் தெரிவித்தார்.

தொடர்ந்தும் இக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக முழுமையான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேபோன்று, இதற்கு முன்னர் உடபலாத்த பிரதேச சபைத் தலைவர் - பாத்ததும்பர நகர சபைத் தலைவர், கங்க வட்ட கோறளை பிரதேச சபைத் தலைவர்களும் இவ்வாறான மோசடிக் குற்றச் சாட்டுக்களின் பேரில் அப்பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. என்றும் முதமலமைச்சர் சரத் ஏக்க நாயக்க தெரிவித்தார்.

இலங்கை வங்கிக்கு புதிய ஆட்சேர்ப்பு

1100 பேர் விரைவில் சேர்ப்பு



இலங்கை வங்கிக்கு நாடளாவியரீதியில் ஆயிரத்து நூறுபேர் புதிதாக சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.

இவர்களுள் யாழ்ப்பாணத்தில் 40 பேர் விசேடமாக சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர். இந்த ஆட்சேர்ப்புக்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கை வங்கியின் தலைவர் கலாநிதி காமினி விக்கிரமசிங்க தெரிவித்தார்.

புதிதாக ஆட்சேர்ப்பதற்காக ஏற்கனவே போட்டிப் பரீட்சை நடத்தப்பட்டுள்ளது. ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில் சுமார் 60 ஆயிரம் பேர் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர். எனினும் ஆட்சேர்ப்பு இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை.

இதேவேளை யாழ்ப்பாணத்துக்கென 40 உத்தியோகத்தர்கள் விசேட தகுதியின் அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். தமிழ் மொழியுடன் விவசாயத்துறையில் பட்டம்பெற்றவர்களே இவ்வாறு சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர். விவசாயத் துறையினருக்குக் கடன் வழங்குவதுடன் அது தொடர்பான செயற்பாடுகளைக் கையாள்வதற்கே 40 பேர் விசேடமாக சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர்.

இதேவேளை, அடுத்த 2012 ஆம் ஆண்டில் 10 பில்லியன் ரூபாய் இலாபத்தை ஈட்டுவதுடன் ஒரு ரில்லியன் (ஒரு இலட்சம் கோடி) ரூபாய் தொகையை ஐந்தொகை இருப்பாகப் பேணுவதற்குமான இலக்கை நோக்கி வங்கியின் செயற்பாடுகளை விரிவுபடுத்தி வருவதாகவும் கலாநிதி விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு நாவற்காடு பிரதேசம்:
விமானத்தை தாக்கியழிக்கும் ஆயுதங்கள் உட்பட பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு



மட்டக்களப்பு நாவற்காடு பிரதேசத்தில் புலிகளால் முன்னர் புதைத்து வைக்கப்பட்ட பெருந்தொகையான ஆயுதங்கள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப் பட்டுள்ளன.

லிகளுடன் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போர் நடவடிக்கையின் போது புலிகளின் பிராந்திய தளபதியாக இருந்த 34 வயதுடைய மோகன் என்றழைக்கப்படும் மகேந்திரராஜா வழங்கிய தகவலுக்கிணங்க விமானத்தை தாக்கியழிக்கும் ஆயுதங்கள், கைக்குண்டுகள், ஸ்னைப்பர் ரக ஆயுதங்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலான வெடி பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறிப்பிடப்பட்ட புலி முக்கியஸ்தர் கொழும்பில் புலனாய்வு பொலிஸாரின் விசாரணையில் தொடர்ந்தும் இரு க்கிறார்.

நாவற்காடு வைத்தியசாலையில் கடமையாற்றிய சிங்கள வைத்தியரொருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் இவருக்கு தொடர்பிருப்பதாகவும் பொலிஸாருக்கு தகவல் கிடைத் துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக