14 ஜனவரி, 2010

பொய் கூறி ஏமாற்றுவோரை மக்கள் நம்பக் கூடாது - நிட்டம்புவையில் ஜெனரல் சரத்

வெறும் பொய்களை மட்டுமே கூறி மக்களை ஏமாற்றிவரும் அரசியல்வாதிகளை நம்பி ஏமாற வேண்டாம் எனத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா, எந்தவொரு முக்கியமான தீர்மானம் எடுக்கும் போதிலும் முதலில் நாட்டைப் பற்றிச் சிந்திக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நிட்டம்புவையில் நேற்றுமாலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசும் போதே அவர் இக்கருத்தினை வெளியிட்டுள்ளார்.
"நான் என்னுடைய கொள்கைகளை மிக எளிதான முறையில் முன்வைத்துள்ளேன். உங்களைத் திசை திருப்புவதற்காகப் பொய் வாக்குறுதிகளை வழங்கவில்லை. அவ்வாறான வாக்குறுதிகளைக் கேட்டும் பார்த்தும் ஏமாற வேண்டாம்.
சுயநலங்களைத் தவிர்த்து நாட்டுக்காக செயற்படுபவர்கள் யாரென்பதை இனங்காண வேண்டும். நீங்கள் தீர்மானம் எடுக்கும்போது நாட்டைப் பற்றி முதலில் சிந்திக்க வேண்டும்" என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக