14 ஜனவரி, 2010

இந்துக்களின் தைப்பொங்கல் காலத்து எதிர்பார்ப்புகள் எமது பிரதேசத்தின் பன்மைத்துவத்துகுக்கு எடுத்துக்காட்டு

இலங்கையின் எல்லாப் பாகங்களிலும் கொண்டாடப்படும் தைப் பொங்கல் பண்டிகையின்போது இந்துக்கள் தம் பாரம்பரிய கலாசார மரபுகளை அனுஷ்டித்து, அவற்றுக்குத் தம்மை அர்ப்பணித்து, எதிர் காலம் குறித்தும் எமது சமூகத்தில் அமைதி, சுபீட்சம், புரிந்துணர்வு ஏற்படவும் சாதகமான எதிர்பார்ப்புகளை வைக்கின்றனர். இது எமது சமூகத்தின் பன் மைத்துவத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரி வித்துள்ளார். அந்தச் செய்தியில் அவர் மேலும் கூறியிருப்பவை வருமாறு: இந்துக்களின் பஞ்சாங்கத்தில் மிக விசேடமான ஒரு பண்டிகையான தைப்பொங்கல் மரபுகளையும், கிரியைகளையும் இந்துக் கள் தொடர்ந்தும் அனுஷ்டித்து வருகின் றனர். இரண்டு வகையில் புனிதமாகக் கரு தப்படும் இத்தினம் சிறந்த அறுவடையை எதிர்பார்த்தும் விவசாயிகள் தமது கடின உழைப்புக்குப் பின்னர் பெற்ற அறு வடைகளுக்காகவும், அதை அளித்த சூரிய பகவானுக்கு நன்றி செலுத்துவதற்காகவும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும்.

இலங்கை வாழ் இந்துக்கள் உலகெங் கிலும் பரந்துவாழும் தமது இந்து சகோதரர்களுடன் சேர்ந்து இலங்கையின் பிரபலமான இந்துப் பண்டிகையான தைப்பொங்கல் பண்டிகையைக் கொண்டாடும் இவ் வேளையில் சுமார் மூன்று தசாப்தங்களாக அவர்களின் பெரும்பாலானவர்களுக்கு மறுக்கப்பட்டிருந்த சுதந்திரத்தை அனுபவிக்கக் கிடைத்திருப்பது அவர்களது மகிழ்சிக்குப் பெரிதும் காரணமாய் அமைகிறது.

இன்றைய தைப்பொங்கல் தினத்தில் எமது இந்து சகோதரர்களுக்கு எதிர்காலம் குறித்த நம்பிக்கை தரும் எதிர்பார்ப்புகளை வைப்பதற்கும் வென்றெடுக்கப்பட்டுள்ள சமாதானத்திற்காக நன்றி செலுத்தவும் தங்களது குழந்தைகளுக்குப் போன்றே முழு இலங்கையர்களுக்கும் புதியதோர் இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கான சந்தர்ப்பம் கிடைத்தமைக்காகவும் நான் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன். இலங்கை வாழ் அனைத்து இந்துக்களுக்கும் எனது மகிழ்ச்சிகரமான தைப்பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு, எம்மிடையே சமாதானமும், சுபீட்சமும், நல்ல நம்பிக்கையும்இ புரிந்துணர்வும் நிலைக்கட்டும் என்ற அவர்களது பிரார்த்தனைகளில் நானும் இணைந்துகொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக