14 ஜனவரி, 2010

சரத் பொன்சேகா-சம்பந்தன் திருட்டு ஒப்பந்தத்தை 27ம் திகதி கிளித்தெறிவேன்- மஹிந்த ராஜபக்ஷ

உள்நாட்டு, வெளிநாட்டு சதிகாரர்களுக்குத் தக்க பாடம் புகட்டுவதற்காக ஒன்றுபடுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் அழைப்பு விடுத்தார். எங்களது நாட்டை நாங்கள் பார்த்துக் கொள்ளுகின்றோம். இங்கு கையடிக்க வராதீர்கள் என்று சொல்லும் வகையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதித் தேர்தல் அபேட்சகரான என்னை அமோக வெற்றிபெறச் செய்யுங்கள் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.
ஐ. ம. சு. முன்னணியின் இரத்மலானை ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டம் இரத்மலானை ரயில்வே விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், நான் 2005ம் ஆண்டில் ஜனாதிபதியாகப் பதவியேற்கும் போது நாடு துண்டாடப்பட்டிருந்தது. பயங்கரவாதம் அரசோச்சியது. பாரிய அர்ப்பணிப்புக்களைச் செய்து தான் பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டினோம்.
நாட்டை மீண்டும் ஐக்கியப் படுத்தினோம். பிளவுபட்டிருந்த மக்களையும் ஒன்றுபடுத்தி னோம். இதன் பயனாக வெளிநாட்டு அழுத்தங்களை வெற்றிகரமாக எதிர்கொண் டோம். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையின் பயனாகவே யுத்த நிறுத்த உடன்படிக்கையை இரத்து செய்ய முடிந்தது.
புலிகளையும் தடைசெய்ய முடிந்தது. இவ்வாறு பாரிய அர்ப்பணிப்புக் களைச் செய்துதான் நாடு விடுவிக்கப் பட்டிருக்கின்றது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் மற்றொரு இரகசிய உடன்படிக்கை என்ற செய்தியைக் கேட்டு ஆச்சரியமடைந்தேன்.
திருட்டுத் தனமான இரகசிய உடன்படிக்கை கள் ஊடாக நாடு துண்டாடப்படவோஇ காட்டிக்கொடுக்கவோ ஒரு போதும் இடமளி யேன். சரத் பொன்சேகா சம்பந்தனுடன் செய்துள்ள திருட்டு உடன்படிக்கையை எதிர்வரும் 27ம் திகதி கிழித்தெறிவேன். உங்களுக்கும், உங்களது குழந்தைகளுக்கும் வளமான எதிர்காலத்தைப் பெற்றுத் தருவேன். சிறந்த உலகிற்கு இட்டுச் செல்லு வேன் என்றார்.
இக்கூட்டத்தில் அமைச்சர்கள் ஏ.எச்.எம். பெளஸி, ரோகித போகொல்லாகம, ஜீவன் குமாரதுங்க, தினேஷ் குணவர்தன, எம்.பி. விமல் வீரவன்ச உட்பட முக்கியஸ் தர்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக