26 ஆகஸ்ட், 2009

இடம்பெயர்ந்து அம்பாறை, ஆலையடிவேம்பு பிரதேசங்களில் உள்ள மக்களின் வாழ்வதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை-

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட திருமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலிருந்து இடம்பெயர்ந்து அம்பாறை, ஆலையடிவேம்பு பிரதேசங்களில் தங்கியிருக்கும் மக்களின் வாழ்வதாரத்தை மேம்படுத்த அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி 20யுவதிகளுக்கு ஆறு மாதகால தையல் பயிற்சியும், 20ஆயிரம் ரூபாய் பெறுமதியான தையல் உபகரணங்களும் பகிர்ந்தளிக்கப்பட்டதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அத்துடன் ஆறுமாத தையல் பயிற்சி நெறியை நிறைவுசெய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படுவதுடன், இது தொடர்பிலான கண்காட்சிகள் நடத்தப்படவுள்ளதாகவும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக